என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தலைமை செயலாளர் அவசர ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் பங்கேற்பு
    X

    தலைமை செயலாளர் அவசர ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் பங்கேற்பு

    • மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை.
    • கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை 4.30 மணியளவில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

    மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    ஆலோசனையின்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

    Next Story
    ×