search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Council Chairman"

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.

    காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×