search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin"

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    நெல்லை அருகே  கல்குவாரி விபத்தில் பலியான 4பேர் குடும்பத்திற்கு தமிழக அரசு  ரூ.1  கோடி நிவாரணம் வழங்கவேண்டும், அனைத்து கல்குவாரிகளிலும் அதிகாரிகள் குழுவினர் களஆய்வு செய்திடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர்   தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாவட்டசெயலாளர் வழக்கறிஞர்  கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் லிங்கராஜ் , மாநில தொண்டரனி செயலாளர்கள் லெட்சுமண பாண்டியன், அசோக்குமார்,  மாநில மகளிரணி சரஸ்வதி, அசுபதி , மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  கரு.ராஜசேகரன், மாநில இளைஞரணி மாரிமுத்து கிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர்கள் மருதன்வாழ்வு ரவி, அதிக்குமார் குடும்பர்,  பெருமாள், கடம்பூர் கடற்கரை, ஆழ்வை பொன்அமிர்தம், குருவை சதீஷ்குமார்,  புதூர் சிவசெல்வம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் பேசியதாவது:-

    நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அப்பாவிகள் 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். உயிர் இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்க ளின் குடும்பத்தினருக்கு, உரிய நீதி கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஆலோசனையின்பேரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் மற்றும், சாத்தான்குளம் தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் அதிகளவில் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் பலகோடி ரூபாய் மதிப்பில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி முறைகேடாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் அனைத்தையும் மூடவேண்டும், அனைத்து கல்குவாரிகளிலும் களஆய்வு செய்திடவேண்டும்.
    விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளை தடை செய்வதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்தும், உரிய அபராதம் விதித்தும் பாரபட்சமின்றி சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் கனிம வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எங்களின் போராட்டமும் முடிவில்லாமல் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் செந்தூர்பாண்டியன் (தூத்துக்குடி), கோவில்பட்டி சண்முகநாதன்(மேற்கு), தூத்துக்குடி செந்தூர்பாண்டியன், ஜே.சி.பி.முருகன் ஓட்டப்பிடாரம் மேற்கு, மனோகரன் கிழக்கு, முருகேசன்(வடக்கு), சின்னத்துரை (கருங்குளம்) , விளாத்திகுளம் உமையனன் (கிழக்கு), குளத்தூர் பெருமாள் ( தெற்கு), கவுன்சிலர் கேசவன் ஆழ்வை கிழக்கு, ராஜா மேற்கு, செல்வம் தெற்கு கயத்தாறு ரவி (கிழக்கு), சக்கரவர்த்தி(மேற்கு), பேச்சிமுத்து(மத்தி), தொண்டரணி ஒட்டுடன் பட்டி நடராஜன், கருப்பு சட்டை கருப்பசாமி, ப்ரவீன், கதிரவன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கான  ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கனகராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ரமேஷ் பாண்டியன், துரைபாண்டியன், மாரிமுத்து பாண்டியன் செய்திருந்தனர்.
    உடன்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட உடன்குடி கிராமத்தில் உடன்குடிஅனல் மின்  நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதைப்போல இந்த அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழி அருகே துறைமுகம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 2-ம்அலகு மற்றும் 3-ம்அலகு விரிவாக்கம் செய்வதற்காக காலன் குடியிருப்பு கிராமம் மற்றும் மாநாடு, தண்டுபத்து கிராமம் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெறாத காலி இடங்கள் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் இந்த 2 கிராமங்களிலும் உள்ள காலி நிலங்களை பத்திரப்பதிவுசெய்ய முடியாமல் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தில் உருவாகும் மின்சாரத்தை வெளியே எடுத்துச் செல்வதற்கு வசதியாக மாநாடு தண்டுபத்து கிராமபகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 சென்ட் காலி நிலத்தை வாங்கி, அதை சுற்றி கம்பி வேலி அமைத்து மின் கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 18 டன் இரும்பு பயன்படுத்தி சுமார் 500 அடிக்கு மேல் உயரத்தில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
    இதுபற்றி நிலம் கொடுத்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    3 சென்ட் காலியிடத்தை நம்மிடம் எழுதி வாங்கி பத்திரம் பதிவு செய்து விட்டு, இடத்திற்கு தக்கபடி ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நமது வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு, அதற்கு பின்பு அந்த 3 சென்ட் இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கிறார்கள், 3 சென்ட்இட த்திலும் எந்த மரம், செடி, கொடிகள் இருக்கக்கூடாது என கூறுகிறார்கள்.

    மேலும் இதைசுற்றி உள்ள மற்ற நிலங்களைபின்பு வாங்குவதாக சொல்லி இருக்கிறார்கள் என்று விவசாயி கூறினார். முதல் அலகு பணி முதலில் செயல்படும் என்றும், அதன் பின்பு 2-ம்அலகு 3-ம் அலகு செயல்படும் என்றும், இவ்வளவு சக்தி வாய்ந்த நவீனரக அனல் மின்நிலையம் தென்பகுதியில் இப்போது தான் அமைக்கப்படுகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் தலைநிமிர முடியாது என்று சொல்லும் அளவுக்கு உழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு வழங்கி உள்ளார். கலைஞர் பிறந்தநாள் விழாவை மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கொண்டாடினோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 

    மாவட்ட கழகம் சார்பில் 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேதி கொடுத்த உடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதே போன்று இளைஞர் அணி ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 300 பேருக்கு உணவு மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, எந்த வகையில், கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. ஆகையால் இளைஞர்கள் இயக்கத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து மாணவர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி, இளைஞர் அணிக்கு விளக்கி கூற உள்ளோம். 

    கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது மட்டும் இயக்கம் அல்ல. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் பணி மூலம் தி.மு.க.வை எவராலும் வெல்ல முடியாது என்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் கழக உடன்பிறப்புகளிடமும் நன்மதிப்பை பெற்று மக்கள் தொண்டாற்றி வரும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி முறை பற்றிய பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, ஜெயக்குமார் ரூபன், மாவட்்ட துணை செயலாளர்கள் ஆறுமுக பெருமாள், முகமது அப்துல்காதர், பொருளாளர் ராமநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மாணவர் அணி அருண் குமார், மகளிர் அணி ஜெசி பொன்ராணி, விவசாய அணி ஆஸ்கர், ஆதிதிராவிடர் நலக்குழு டி.டி.சி.ராஜேந்திரன்,ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். 

    மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலைஞர் சிலை திறக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் தூத்துக்குடி 3-வது இடத்தை பிடித்தது. 
    உங்கள் ஒத்துழைப்பால் தான் அது நடந்தது. 

    கைரிக்‌ஷா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது தி.மு.க. அதனை பின்பற்றி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து உள்ளது. 

    எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தது தமிழகம்தான். அதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்தான் காரணம். தற்போது முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். நம் கொள்கைகளை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அரசின் திட்டங்களை பரப்ப வேண்டும். தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தி.மு.க. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும், தி.மு.க கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். 

    அன்றைய தினம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்குவது, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் சுசீ.ரவீந்திரன், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி உமாதேவி, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    தூத்துக்குடி:

    மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 27 -ந்  தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ரஜோ ஸ்கட்டிங் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் தலைமையில் தமிழ்நாட்டிற்காக களமிறங்கி 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வென்று புள்ளி பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்தனர். 

    இப்போட்டியில் மும்பை, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், நாக்பூர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பெற புதிய திட்டப்பணிகள் தொடங்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் நடைபெற்றது, மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர். 

    மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், 

    கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, அதிகாரிகள் ரூபன், பொன்னையா, அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி தொடக்க உரையாற்றி பேசுகையில், மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

     தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உட்பட, இருக்கும் நிதியை கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினார். 

    மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்களை வாசிக்க கூறினார். அதன்படி15-வது நிதிக்குழு மானியம் 2021-2022 நிதியின் கீழ் மேற்கொள்ளவுள்ள 48வகையான திட்ட பணிகளுக்கு அனுமதி கோருதல், மண்டலங்கள் வாரியாக வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுத்தல், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், 

    விபத்து ஏற்படும் வகையிலும் சாலை நடைபாதைகளில் நாள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும், கட்டணம் வசூலிப்பது, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாத்தல், அனுமதியற்ற, கட்டிடங்கள், வரை படத்தை மீறிய கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது,

    பொதுசுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணியாற்ற போதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நிர்வாக அனுமதியுடன் ஒப்பந்தப்புள்ளி மூலம் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சியில் தினசரி சேர்க்கப்படும் குப்பைகள் திடக்கழிவு, மக்கும் கழிவுகள் சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றும்பணிகள், சுகாதார பிரிவிற்கு பொது பயன்பாட்டிற்குபுதிய வாகனங்கள் கொள்முதல் செய்தல்,

     தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில் பூங்காவில் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, வணிக வளாகம் பகுதிகடைகளில் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் வருவாயை பெருக்குதல், 

    தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 59 கடைகளில் வாடகை பாக்கி வசூலிப்பது, தூத்துக்குடி- மீளவிட்டான் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில் தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் மாநகராட்சி நிர்வாக பணிகள் உட்பட 35 வகையான பொருட் குறிப்புகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நடைபாதை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி சுடலைமணி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
    தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தங்கள் நலனை மட்டுமே சிந்தித்தார்கள் என அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் ரூ.2500 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. 81 கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வரும் ஆண்டில் ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சமூக நலத்துறை மூலம் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 
    தமிழகம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 10 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு உள்ளது என கண்டறியபட்டு அதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    குழந்தை பருவம் தான் நல்ல ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, அறிவுத்திறன் பெறும் காலம் கர்ப்பினி பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி அரசு பணியில் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழில் எழுத்து தேர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்கு மட்டும்  தான் இனி அரசு வேலை என்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

    மாவட்டத்தில் 1100 ஏக்கரில் ரூ.1400 கோடி முதலீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக முதல்கட்ட பணியாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து இங்கு தொழில் தொடங்க தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
    அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாதந்தோறும் 600 முதல் 1200 வரை மிச்சப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான். விருதுநகர் சம்பவம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எல்லா தொலை தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. 

    இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கென்று எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அமைச்சர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று பணியாற்றினார்கள் தி.மு.க. ஆட்சியில் ஓராண்டு சாதனை அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில பேச்சாளர்கள் இளங்கோவன், இருதயராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்பட பலர் பேசினார்கள். 
    புதியம்புத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் மாரி கணேஷ் (வயது 23). இவரது மனைவி முத்துக்கொடி (21). மாரி கணேஷ் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று மாரி கணேஷ் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை தாக்கியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்கொடி புதியம்பு த்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாரி கணேசை கைது செய்தனர்.
    சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்  அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.

    இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார்  1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா   நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.

    யூனியன் தலைவர்  ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்  பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர்   அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன்,  நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள்  லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது என தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது 1552 படுக்கை களுடன் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது. மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து மருத்துவராக இன்று மாறியுள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னுடைய பட்டமளிப்பு விழாவில் பேசியது எனக்கு நினைவில்லை.

    மருத்துவக்கல்லூரி முதல்வர் மிகச் சிறந்த பேச்சாளர் அவருடைய பேச்சை நான் ரசிப்பேன். நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதனை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம்.  கொரோனா வால் 3 ஆண்டுகள் கழித்து  இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள்.

    உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள்தான். டாக்டர் ஆவது மிகப்பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

    சிறு, சிறு தவறுகள் நடந்தா லும் கல்லூரி முதல்வர் மன்னித்து விடுவார். அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மையும் கூட.

    உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களே உங்களது பெற்றோருக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய மருத்துவர்களாகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, கண்காணிப்பாளர் சைலேஸ், மருத்துவ அலுவலர் குமரன், குமாரசாமி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில 4 மண்டலம் 60 வார்டுகள் உள்ளது.மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்களை நாய்கள் விரட்டி சென்றது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடவே விரட்டி சென்ற நாய்கள் திரும்பிச் சென்றது.

    இதுபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை விரட்டி விரட்டி சென்று தெரு நாய்கள் கடித்து  வருகிறது என்று  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் தெரு விளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் கூறிய புகாரை சரி செய்வதற்காக தெருக்களில் நடந்து சென்று எரியாத தெருவிளக்குகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. கவுன்சிலர் ஒருவரையும் தெருநாய்கள் விரட்டி கடித்து குதறியது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

     இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வ ரூபம், 8 மணிக்கு ஹோமம், 9.30 மணிக்கு பூர்ணாகுதி, 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம், திருமஞ்சனம் நடை பெற்றது.

    11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பின்னர் சுவாமி பொலிந்து நின்றபிரான், நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி பொலிந்து நின்றபிரான் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணி கண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×