search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wife threatened"

    புதியம்புத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் மாரி கணேஷ் (வயது 23). இவரது மனைவி முத்துக்கொடி (21). மாரி கணேஷ் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று மாரி கணேஷ் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை தாக்கியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்கொடி புதியம்பு த்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாரி கணேசை கைது செய்தனர்.
    ×