என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்தவர்களை படத்தில் காணலாம்.
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ-மாணவிகள் சாதனை
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி:
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 27 -ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ரஜோ ஸ்கட்டிங் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் தலைமையில் தமிழ்நாட்டிற்காக களமிறங்கி 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வென்று புள்ளி பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்தனர்.
இப்போட்டியில் மும்பை, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், நாக்பூர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






