என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Trinamool Congress"
- வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்.
மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.
இது குறித்த அறிவிப்பில், "வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்."
"பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்."
"வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்," இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
We are pleased to announce the candidature of @sagarikaghose, @SushmitaDevAITC, @MdNadimulHaque6 and Mamata Thakur for the forthcoming Rajya Sabha elections.We extend our heartfelt wishes to them and may they work towards upholding Trinamool's enduring legacy of indomitable…
— All India Trinamool Congress (@AITCofficial) February 11, 2024
- நிலுவை தொகையை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா கூறினார்.
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் எனவும், இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
- காங்கிரசுடன் உறவை முறிக்க காரணமானவர் குறித்து திரிணமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.
- அவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில் மூன்று முறை குறிப்பிட்டார்.
கொல்கத்தா:
மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.
சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு 2 முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார். காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என தெரிவித்தார்.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை 3 முறை குறிப்பிட்டு தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
- பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதே போல பஞ்சாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருக்கிறார். இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களின் ஒருவரான தீபா தாஸ் முன்ஷி கூறியதாவது, "மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு உதவுகிறார் என நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் அவருக்கு மறைமுகமான தொடர்பு இருப்பது எங்களுக்கு தெரியும். அவரது இந்த அறிவிப்பின் மூலம் அது நிரூபணம் ஆகியிருக்கிறது. இதுவரை இந்தியா கூட்டணியில் இருந்த அவர், இப்போது ஏன் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்கிறார். அவர் பா.ஜ.க.வுடன் கை கோர்த்து இருப்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதும் இதன் மூலம் வெளிபடுகிறது" என தெரிவித்தார்.
- மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.
பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.
இதுகுறித்து பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது.
வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மொய்த்ரா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.
- எதிா்க்கட்சிகள் அனைவரும் திருடா்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க. முயலுகிறது.
- காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.
கொல்கத்தா:
வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
எதிா்க்கட்சிகள் அனைவரும் திருடா்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க. முயலுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் முறியடிக்க முயற்சித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் காங்கிரசும், மாா்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து நமது கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிா்ப்பதற்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரையில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ.க. வுக்கு எதிராகப் போராடி வருகிறது. மக்களவைத் தோ்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ. க.வை எதிா்த்து நிற்கும்.
இந்த தடவையும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.
பா.ஜ.க. தனது அரசியல் லாபத்துக்காக மேற்கு வங்க மாநில மக்களின் குடியுரிமை விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள மக்கள் பலா் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுவியவா்கள் என்று பிரசாரம் செய்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனா்.
முன்பு குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள்தான் முடிவெடுத்து வந்தனா். இப்போது, அந்த உரிமை அவா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை இல்லாத மக்கள் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானா்ஜி, கூட்டணிக் கட்சிகள் மீது இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில், மேற்கு வங்கத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 'குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தில் அதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டோம் என்று மம்தா பானா்ஜி மக்களை தவறாக வழி நடத்துகிறாா். அச்சட்டம் அமலாக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை' என்று கூறியிருந்தாா்.
- இதுவரை இரு அவைகளிலிருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
- எம்.பி.க்கள் வெளியேற்றம் ஏன் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது
நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் இதுவரை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பாராளுமன்றத்தின் "மகர் த்வார்" வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது மேற்கு வங்க செரம்போரே (Serampore) தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மக்களவை உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி (Kalyan Banerjee) மாநிங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் (Vice president Jagdeep Dhankhar) பேசுவதை போல் மிமிக்ரி செய்து நடித்து காண்பித்தார். அத்துடன் அவர், "எனது முதுகெலும்பு நேராக உள்ளது. நான் மிக உயர்ந்து இருக்கிறேன்" என கூறினார். உடலசைவகளையும் துணை ஜனாதிபதியை போலவே செய்து காட்டினார்.
நகைச்சுவையாக அவர் மிமிக்ரி செய்ததை பல எம்.பி.க்கள் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் இதனை தனது போனில் பதிவு செய்தார்.
இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
மீண்டும் பாராளுமன்றம் மதியம் கூடிய போது ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து, "மாநிலங்களவை தலைவர் பதவியும் சபாநாயகர் பதவியும் வெவ்வேறானவை. அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மூத்த தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரின் நடத்தையை வீடியோ எடுக்கிறார். மக்களவை தலைவரை மிமிக்ரி செய்வது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு வெட்கக்கேடானது? இதை ஒருக்காலும் ஒப்பு கொள்ள முடியாது" என ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளது.
If the country was wondering why Opposition MPs were suspended, here is the reason…
— BJP (@BJP4India) December 19, 2023
TMC MP Kalyan Banerjee mocked the Honourable Vice President, while Rahul Gandhi lustily cheered him on. One can imagine how reckless and violative they have been of the House! pic.twitter.com/5o6VTTyF9C
- மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
- தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.
Lalit Jha, the mastermind of the attack on our Temple of Democracy, had been in close association with TMC's Tapas Roy for a long time... Isn't this proof enough for investigation into the connivance of the leader? @AITCofficial @TapasRoyAITC @abhishekaitc #shameontmc pic.twitter.com/1PIVnnbGx9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 14, 2023
இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார்.
- பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்?
- புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்?
புதுடெல்லி:
பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக்கப்பட்டாரா? ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன.
- எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக காலையில் அறிவிக்கப்பட்டது.
- ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
மாநிலங்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் இருக்கையைவிட்டு எழுந்து ஆவேசமாக பேசினார். அவைத்தலைவர் உத்தரவிட்டும் கேட்கவில்லை.
இதையடுதது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார். டெரிக் ஒபிரையன் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவித்தார்.
டெரிக் ஓ பிரையன் அவையைவிட்டு வெளியேற வேண்டும் என கூறிய அவைத்தலைவர், அதன்பின்னர் அவையை ஒத்திவைத்தார். ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது டெரிக் ஓ பிரையன் அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் ஓ'பிரையன் மீண்டும் சபைக்குள் நுழைந்திருக்க முடியாது. டெரிக்கை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாததால் அவை நடவடிக்கையில் அவர் பங்கேற்கலாம் என அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கூறினார்.
- மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள்.
- ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்களில் நீக்கப்பட்ட பகுதி மீண்டும் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார்.
2005 மற்றும் 2014-க்கு இடையில் சீன அரசு காங்கிரசுக்கு பணம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் துபே நேற்று பேசினார். பின்னர் பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட கடிதத்தில் துபே பேச்சின் சில பகுதிகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் நீக்கப்பட்ட பகுதிகளின் சில பகுதிகள் பாராளுமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா கூறும்போது, கேள்வி நேரம் முக்கியமானது. ஆனால் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். 12 மணிக்கு பிறகு அவை தொடர்ந்து நடைபெற்றது.
மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் ஆவேசமாக பேசினார். அவர் இருக்கையை விட்டு எழுந்து பேசினார். சபையின் நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார்.
டெரிக் ஒபிரையன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார். பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சஸ்பெண்டு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
- பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
- இதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலை வகித்தது.
எதிர்க்கட்சியான பா.ஜ.க. 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலை வகித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது. திரிணாமுல் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்