என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்டு- மேல்சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததால் நடவடிக்கை
- மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள்.
- ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்களில் நீக்கப்பட்ட பகுதி மீண்டும் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார்.
2005 மற்றும் 2014-க்கு இடையில் சீன அரசு காங்கிரசுக்கு பணம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் துபே நேற்று பேசினார். பின்னர் பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட கடிதத்தில் துபே பேச்சின் சில பகுதிகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் நீக்கப்பட்ட பகுதிகளின் சில பகுதிகள் பாராளுமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா கூறும்போது, கேள்வி நேரம் முக்கியமானது. ஆனால் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். 12 மணிக்கு பிறகு அவை தொடர்ந்து நடைபெற்றது.
மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் ஆவேசமாக பேசினார். அவர் இருக்கையை விட்டு எழுந்து பேசினார். சபையின் நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார்.
டெரிக் ஒபிரையன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார். பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சஸ்பெண்டு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்