என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மாநிலங்களவை நடவடிக்கையில் திரிணாமுல் காங். எம்.பி. பங்கேற்கலாம்- அவைத்தலைவர் அனுமதி
- எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக காலையில் அறிவிக்கப்பட்டது.
- ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
மாநிலங்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் இருக்கையைவிட்டு எழுந்து ஆவேசமாக பேசினார். அவைத்தலைவர் உத்தரவிட்டும் கேட்கவில்லை.
இதையடுதது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார். டெரிக் ஒபிரையன் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவித்தார்.
டெரிக் ஓ பிரையன் அவையைவிட்டு வெளியேற வேண்டும் என கூறிய அவைத்தலைவர், அதன்பின்னர் அவையை ஒத்திவைத்தார். ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது டெரிக் ஓ பிரையன் அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் ஓ'பிரையன் மீண்டும் சபைக்குள் நுழைந்திருக்க முடியாது. டெரிக்கை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாததால் அவை நடவடிக்கையில் அவர் பங்கேற்கலாம் என அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்