என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபா தாஸ் முன்ஷி"
- பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதே போல பஞ்சாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருக்கிறார். இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களின் ஒருவரான தீபா தாஸ் முன்ஷி கூறியதாவது, "மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு உதவுகிறார் என நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் அவருக்கு மறைமுகமான தொடர்பு இருப்பது எங்களுக்கு தெரியும். அவரது இந்த அறிவிப்பின் மூலம் அது நிரூபணம் ஆகியிருக்கிறது. இதுவரை இந்தியா கூட்டணியில் இருந்த அவர், இப்போது ஏன் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்கிறார். அவர் பா.ஜ.க.வுடன் கை கோர்த்து இருப்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதும் இதன் மூலம் வெளிபடுகிறது" என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்