search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும்: மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா
    X

    நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும்: மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா

    • நிலுவை தொகையை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா கூறினார்.
    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் எனவும், இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×