search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    • இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.

    இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.

    கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    லக்னோ அணி

    லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2  அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்

    மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.
    • டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

    மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார். இந்த அவுட் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

    இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.  

    • டெல்லி அணியில் அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக போரல் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அரை சதம் அடித்த கையோடு அவர் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சாய் ஹோப் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அக்சர் படேல் 15, பண்ட் 15 என வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய போரல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் மர்றும் குல்புதின் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 7 போட்டிகளில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை ரோகித் குவித்தார்.
    • அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், "ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    • 12-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.

    புதுடெல்லி, மே 7-

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4, நமன் 0 என விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர்.
    • நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×