search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ரீத்தி ஜிந்தா"

    • நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
    • ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

    ,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .



    இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
    • அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு.


    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில் அவருக்கும் என் பாராட்டும் மரியாதையும் உண்டு என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது. இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள். ஆனால் ஷஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்.

    தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

    ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே ஷஷாங்க் போல் உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்

    இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.

    ×