search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரன் குவிப்பதில் தடுமாற்றம்: கண்ணீர் விட்டு அழுத ரோகித்- வைரலாகும் வீடியோ
    X

    ரன் குவிப்பதில் தடுமாற்றம்: கண்ணீர் விட்டு அழுத ரோகித்- வைரலாகும் வீடியோ

    • முதல் 7 போட்டிகளில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை ரோகித் குவித்தார்.
    • அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், "ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    Next Story
    ×