search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிடல்ஸ்"

    • மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

    மும்பை:

    மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு, டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


     பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் ஐ.பி.எல். தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
    • தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, கிரிக்கெட்டிற்கு திரும்ப முழு தகுதி பெற்றுள்ளார்

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்றார். ஆனாலும் அவர் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கேப்டன் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் பலம்பெறும். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப் பட்டியலில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். அசோசியேட் நாடுகளான நமீபியாவில் இருந்து டேவிட் வைஸ், நெதர்லாந்தில் இருந்து மீக்கெரன் ஆகியோரும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட், ஸ்டார்க் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    • ஐபிஎல் தொடரில் பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
    • ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே அணிக்காக ஆடிவரும் ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி.

    லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல்லில் 7 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்த அவரால் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கமுடியவில்லை. இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் ஆர்சிபி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கோலி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    அதில், விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்ற நிலையில், அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

    2008-ம் ஆண்டில் டெல்லி அணி விராட் கோலியை ஏலத்தில் எடுப்பதாக இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலையில் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. இல்லாவிடில் விராட் கோலி டெல்லி அணிக்காகதான் விளையாடிருப்பார். 

    பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
    • சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


    டோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

    • பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற நாளைய ஆட்டத்தில் சென்னை அணி வெல்ல வேண்டியது அவசியம்.
    • தோல்வி அடைந்தால் மற்ற அணி ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

    பிளே-ஆப்பில் மூன்று இடங்களுக்கு 7 அணிகள் இடையே போட்டி உள்ளது. 70 லீக் ஆட்டங்களில் இதுவரை 65 போட்டி முடிவடைந்துள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாளை மதியம் 3.30 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.

    பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற நாளைய ஆட்டத்தில் சென்னை அணி வெல்ல வேண்டியது அவசியம். தோல்வி அடைந்தால் மற்ற அணி ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

    ஒருவேளை சென்னை அணி தோற்று லக்னோ, பெங்களூர், மும்பை ஆகிய அணி தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் சென்னை அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும்.

    சென்னை அணி மோதும் போட்டிக்கு பிறகுதான் மற்ற அணிகள் (லக்னோ, மும்பை, பெங்களூரு) ஆட்டங்கள் நடக்கிறது. எனவே நாளைய ஆட்டத்தில் சென்னை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டியது அவசியம்.

    சென்னை அணி பேட் டிங்கில் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாகர், பதிரனா, தேஷ்பாண்டே, ஜடேஜா, தீக்சனா ஆகியோர் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சென்னையின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. சென்னை அணியின் பேட்டிங் பலம் வாய்ந்து காணப்படுகிறது. ஆனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    இவ்விரு அணிகள் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 13 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று உள்ளது.

    டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும். மேலும் முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க போராடும்.

    டெல்லி அணியில் டேவிட் வார்னர், ரூசோவ், மணீஷ் பாண்டே, பிலிப் சால்ட், அக்சர் பட்டேல், இஷாந்தி சர்மா, குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • சென்னை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் புதிய சீருடை அணிந்து களம் இறங்க உள்ளது.
    • இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன.

    டெல்லி:

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்க உள்ளது.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய சீருடை அணிந்து ஆட உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×