search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stealing"

    • பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    • கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 சிறுவர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பாளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நகை பறித்த சிறுவர்கள்

    அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர்களில் 4 பேர் கடந்த 2-ந் தேதி பாளை தெற்கு பஜாரை சேர்ந்த காந்தியம்மாள் என்பவரிடம் 14 கிராம் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 3 பேரை விடுவித்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருவது தெரியவந்தது. இதனால் அவர்களை நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்.
    • 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

    உடுமலை :

    உடுமலையையடுத்த வெஞ்சமடை முத்துச்சாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் சிவசாமி(வயது 55).இவர் உடுமலை பஸ் நிலையம் எதிரே துணிக்கடை வைத்துள்ளார்.இந்தநிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி இவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சிவசாமி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா,சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார்,தலைமைக் காவலர் பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் முத்துமாணிக்கம், மணிகண்டன் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.200 க்கும் மேற்பட்ட சிசிடிவி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.இதில் குற்றவாளிகள் சொகுசு காரில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.அத்துடன் குற்றவாளிகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்தது.இதனையடுத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று உடுமலை தாராபுரம் சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.அவர்களிடமிருந்து 4 1/2 பவுன் நகையை கைப்பற்றினர்.அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தங்கராஜ்(வயது 38),திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தினேஷ்(என்ற)தினேஷ்குமார் என்பது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தது.

    குற்றவாளி தங்கராஜின் அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்கும் விதமாக கடந்த 2 வாரங்களுக்கு முன் சிவகங்கையில் வைத்து ஒருவரைக் கொலை செய்து விட்டு தப்பி வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கோவை,திண்டுக்கல்,தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.

    • போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.
    • மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை என்.ஜி.ஓ. ஏ காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று பஸ்சில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

    கைப்பை திருட்டு

    அவரை அழைத்து செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக நடைமேடைக்கு சென்றுள்ளார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் ரூ.3,500 ரொக்கபணம், ஏ.டி.எம். அட்டைகள், விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்டவை இருந்தது.

    வாலிபர் கைது

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கைப்பையை மீட்டனர்.

    • மல்லிகா ராசிபுரத்தில் உள்ள பாப்பம்மாளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டி பாப்பம்மாளுக்கு கொடுத்துள்ளார்.
    • சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி தங்கம் இல்லை என்பதும் அது கவரிங் நகை என்பதும் அவருக்கு தெரிய வந்தது.


    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் செம்மலை படையாச்சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 82).வயதான நிலையில் பாப்பம்மாள் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடியிருந்து வந்தார்.

    தற்போது அவர் நாமக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த மாதம் மல்லிகா ராசிபுரத்தில் உள்ள பாப்பம்மாளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டி பாப்பம்மாளுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த பாப்பம்மாள் மயக்கம் அடைந்தார்.

    இதை பயன்படுத்தி மல்லிகா பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அதற்கு பதிலாக அவர் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை மூதாட்டிக்கு அணிவித்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மல்லிகா சென்ற காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

    இந்த நிலையில் மறுநாள் காலை வரை வீடு திறக்கப்படாததால் பாப்பம்மாளின் உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் மயங்கி கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி தங்கம் இல்லை என்பதும் அது கவரிங் நகை என்பதும் அவருக்கு தெரிய வந்தது. இது பற்றி பாப்பம்மாளின் மகனும் ஓய்வு பெற்ற போலீஸ்காரருமான சுந்தரராஜன் கடந்த 11-ந் தேதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாமக்கல் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவி மல்லிகாவை (60) கைது செய்தார்.

    அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க சங்கலியை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட மல்லிகாவை போலீசார் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் ரெஹனா பேகம் மல்லிகாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் மல்லிகாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார்.
    • போலீசார் மர்மநபரை கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை ரெட்டியார்பட்டி பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா(வயது 37). இவர் மேலப்பாளையம் குறிச்சி முக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

    அதில் கடையில் பணத்தை திருடியது நெல்லையை அடுத்த மருதகுளத்தை சேர்ந்த மில்டன்(வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    கைது

    கைது செய்யப்பட்ட மில்டன்மீது நெல்லை, விருதுநகர், குமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதாய கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடுமுடி அருகே துணிகரம் பேக்கரியில் செல்போன் திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் காச்சக்கார மேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி (25). அதேபகுதியில் உள்ள நால் ரோட்டில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது பேக்கரி கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து டீ கேட்டார்.

    கல்யாண் சக்கரவர்த்தி அந்த நபருக்கு டீ போட்டுக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு மற்றொரு நபருக்கு டீ போட சென்றுவிட்டு மீண்டும் தனது கல்லா பெட்டி அருகே வந்தார்.

    அப்போது அங்கு வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் இருக்கும்.

    டீ கேட்டு வந்த நபர் மீது சந்தேகம் அடைந்த கல்யாண்சக்கரவர்த்தி அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் வேகமாக சென்றார்.

    உடனடியாக கல்யாண் சக்கரவர்த்தி அங்கு இருந்த–வர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரி த்ததில் அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்கிற சேகர் என தெரியவந்தது. அவர் செல்போன் திருடி–யதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சேகரை மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தான்குளம் அருகே ஜே.சி.பி.எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர்

    சாத்தான்குளம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடி பகுதியை சேர்ந்த கொம்பு ராஜ் என்பவர் சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்திலிருந்து சாலைபுதூர் வரை செல்லும் கால்வாய் தோண்டும் பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ளார்.

    இந்த பணியில் திருவண்ணாமலை சேர்ந்த கந்தன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் உள்பட 17 பேர் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று கந்தனும், ஹேமந்த் குமாரும் கால்வாய் பணிக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரங்களில் இருந்து 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து கொம்புராஜிடம் மற்ற பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசில் புகார் செய்தார்.


    சப்-இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கந்தன், ஹேந்த்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 50 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.


    திருச்சுழி அருகே நூதன முறையில் ரே‌ஷன் அரிசி திருடியதாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை போன்றவற்றின் எடை குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன.

    இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளில் ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் மூடைகளில் இருந்து லோடு மேன்கள் சிலர் நூதன முறையில் திருடுவது தெரியவந்தது.

    ஒரு மூடைக்கு 5 கிலோ வீதம் அரிசி மற்றும் சர்க்கரை போன்றவற்றை எடுத்து விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக பில் கிளார்க் தமிழ்குமார் (வயது34) தமிழ்பாடியைச் சேர்ந்த லோடுமேன்கள் முருகன் (35), மதுரைவீரன் (53), லாரி டிரைவர் அழகிரி (49) ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர்.

    திருடப்பட்ட ரேசன் அரிசியை திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் திருமால் (62) என்பவர் வாங்கி விற்றுள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 26 மூடை ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    கோவையில் வேலை பார்த்த கடையில் கட்டுமான பொருட்கள் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் மதுக்கரை மார்கெட்டில் கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் வெள்ளலூரை சேர்ந்த சுதிர் (50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை சுதிர் வாடகைக்கு எடுத்து சென்றார். பல நாட்கள் ஆகியும் அதனை திருப்பி ஒப்படைக்கவில்லை.

    அவரது செல்போனுக்கு கடை உரிமையாளர் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. இது குறித்து சுதாகரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுதிரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் லாரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இவர் திருப்பூர் ரெயில் நிலையம் குட்செட் பகுதியில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மதியம் சாப்பிட சென்ற ராஜ்குமார் மீண்டும் வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.

    இதுகுறித்து அவர் திருப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் போலீசார் சோதனை சாவடி அருகே நின்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருடப்பட்ட லாரியை போலீசார் நிறுத்தினர். அதை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த பார்த்திபன்(27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சங்கரன்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அச்சம்பட்டி ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சண்முகையா (வயது 82). சம்பவத்தன்று இரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1000 ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

     இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    திருட்டு சம்பவங்களை தடுக்க சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தீவிர வாகன சோதனை மற்றும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். 

    விசாரணையில் கருத்தானுரை சேர்ந்த சண்முகையா மகன் இளங்கோ (22), மனோகரன் மகன் மதன்குமார் (17), கண்ணன் மகன் முரளிஆனந்த் (19) என தெரியவந்தது. இவர்கள் பெட்டிக்கடையை உடைத்து ரூ. 1000 ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதை தவிர வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×