search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிப்பு"

    • கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
    • பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரி வாலிபர் சரியான வேலை கிடைக்காததால் தந்தையுடன் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்காக இந்த வாலிபர் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கை ஒருவரிடம் சமீபத்தில் பேசி பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர் செயலி மூலம் பொறியியல் பட்டதாரி வாலிபருடன் தொடர்பு கொண்டு விஜயமங்கலம் அருகே உள்ள ஒரு காலி இடத்திற்கு வரச்சொல்லி உள்ளார்.

    இதனை நம்பி அந்த பொறியியல் பட்டதாரி வாலிபரும் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வாலிபரிடம் அறிமுகமாகி அவர்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.

    அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியதையடுத்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் நீ ஓரினச்சேர்க்கைக்கு எங்களை அழைத்தாய் என வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அந்த பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொறியியல் பட்டதாரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் பறித்து சென்றது திருப்பூர் டி.டி.பி. மில் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (21), திருப்பூர் 15 வேலம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார் (21), 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்த அங்குகுமார் (21), சேலம் மாவட்டம் தாரமங்கலம் வண்ணார் சந்து பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன்படி இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஆனந்தகுமார் என தெரிய வந்தது. ஆனந்தகுமார் உடுமலைப்பேட்டையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் எனவும், அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஓரினச்சேர்க்கை செயலி குறித்து தெரிந்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து ஆனந்தகுமார் போனில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் தொடர்பு கொண்டு அவர் கூறும் இடங்களுக்கு வரும் நபர்களை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் அவமானம் ஆகிவிடும் என்பதால் இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை. இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட ஆனந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இதேபோல் சேலம், பவானி, ஆத்தூர், சங்ககிரி, திருப்பூர், பெருமாநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 4 பேர்களிடம் இருந்து சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது.
    • 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

    கடலூர்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, கடலூர் புதுநகர் போலீசார் பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது. இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

    இந்த நிலையில் பழனிச்சாமி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை பழனிச்சாமியிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தூங்கா நகரம் என்று கூறும் அளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதனால் வடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் பிறந்த பகுதி வடலூராகும். இங்கு அமைந்துள்ள ஞானசபை உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த நகரின் மையப்பகுதியில் ராகவேந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும், வயதானவர்களும், பெண்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது குடும்பத்தார் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்கின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணா நகருக்கு 2 மர்நபர்கள் வந்தனர். ஆஜானு பாகுவான இளைஞர்களாகிய இருவரும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். தங்களின் செறுப்பினை இடிப்பில் கட்டியிருந்த கயிறில் தொங்கவிட்டிருந்தனர். மேலும், கண்களை தவிர வேறெதும் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்திருந்தனர்.அண்ணாநகரில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் சென்ற அவர்கள், பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறையில் படித்திருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை பறித்தனர். இதனால் பதறிப்போய் எழுந்த கர்ப்பிணி, வாலிபர்களை எட்டி உதைத்து கூச்சலிட்டார்.மருமகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமனார் வாலிபர்களை தாக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர். மாமனாரும், மருமகளும் அவர்களை விரட்டியபோது, கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற மர்மநபர்கள், மற்றொரு வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிற்குள் இருந்த மனநலம் குன்றிய பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தாரிடம் இருந்து 2 வாலிபர்களும் தப்பி விட்டனர்.அண்ணாநகரை விட்டு வெளியேறி 2 வாலிபர்களும் அருகில் உள்ள ராகவேந்திரா நகருக்கு சென்றனர். நகரின் கடைசி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைக்க முயற்சித்தனர். சுமார் ஒன்னரை மணி நேரம் போராடியும் கதவினை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து 2 வாலிபர்களும் வெளியேறினர். இது அந்த வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியது.இந்த 3 குடும்பத்தாரும், நேற்று காலை வடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 3 பேரும் கூறிய அங்க அடையாளங்கள் ஒன்றாக இருந்தது. இதையடுத்து ராகவேந்திரா நகரில் இருந்த வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி. கேமிரா பதிவினை மற்றவர்களுக்கு போலீசார் காட்டினர். அவர்களும் தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள் தான் என்று உறுதிபடுத்தினர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடலூர் நகரின் மையப்பகுதியில் மூகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புகாரினை பெற்ற வடலூர் போலீசார், முகமூடி அணிந்த மர்மநபர்களை பிடித்த பிறகு வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர்.

    இந்த சம்பவம் வடலூர் நகரில் வசிப்பவர்களுக்கு மிகவும் வேகமாக பரவியது. இதனால் இரவு நேரங்களில் வடலூர் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடலூர் போலீசாரை பொறுத்தவரையில் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே பணி செய்கின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் இதில் தலையிட வேண்டும். வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும். முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வடலூர் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடலூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.

    அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சாக்லேட் வாங்குவது போல நடித்து துணிகரம்
    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி மகஜான்(55).

    இவர் சோமனூர் பவர் ஹவுஸ் தனியார் பள்ளி எதிரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடையில் அவருடன், அவரது மனைவியும் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று 2 பேரும் கடையில் இருந்தனர். அப்போது பீர் முகமதுக்கு வெளியில் வேலை இருப்பதாகவும், கடையை பார்த்துக்கொள் என மனைவியிடம் கூறி விட்டு வெளியில் சென்றார்.

    இதையடுத்து கடையில் மகஜான் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மகஜானிடம் ரூ.20 எடுத்து கொடுத்து சாக்லெட் கொடுக்குமாறு கேட்டனர்.

    அவரும் சாக்லெட்் எடுக்க சென்றார். அப்போது வாலிபர்கள் 2 பேரும் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியான அவர் திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

    ஆனால் வாலிபர்கள் 2 பேரும் நகையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து மகஜான் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் நகையை பறித்து கொண்டு தப்பியோடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து நகை பறித்து சென்ற மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    • பெண்ணிடம் நகை பறித்த மதுரை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே குயவன்குடி கீர்த்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது48).

    இவர் ராமநாதபுரம் வாரசந்தை யில் காய்கறிகள் வாங்கி விட்டு பஸ்சில் குயவன்குடி யில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் வழிமறித்து சரஸ்வதி கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த சரஸ்வதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் நகை பறித்தவர்கள் மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்த சாந்தக்குமார் (30), செக்கானூரணியை சேர்ந்த சிவக்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருமழிசையில் கடந்த 26-ந் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் நகையை பறித்து தப்பினர்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பரான சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
    • இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி

    புதுக்கோட்டை அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரேவதி (வயது 38). இவர்களது மகள் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் ரேவதி நேற்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்துக்கு வந்தார். பின்னர் கூட்டம் முடிந்து தனது ஊருக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ரேவதி அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (43). இவர்கள் திருமழிசை, ஜவகர் தெருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ஸ்ரீபிரியா கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் ஸ்ரீ பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் ஸ்ரீபிரியா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதில் நகை அறுந்ததில் 7 பவுன் நகையுடன் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா கா ட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (63). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்ம வாலிபர்கள் வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகை பறித்துசென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே வேலாயுதம்பட்டி- காரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). இவரது மனைவி ரேணுகாதேவி (35). வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிசங்கி லியை பறித்து சென்றுள்ள னர்.

    இதுகுறித்து நத்தம் போலீசில் ரேணுகாதேவி புகார் அளித்தார். அதன்பே ரில் இச்சம்பவம் தொட ர்பாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).

    இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

    காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×