search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House"

    • கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது.
    • அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 35 நாட்களில் மட்டுமே  இவர் 6 முறை  விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

     

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை.
    • ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல்.

    கரூரில் முன்னாள் :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர்.

    எம்.ஆர்.வி ட்ரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.ஆர்.வி. ட்ரஸ்ட், சாயப்பட்டறை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவுபெற்றுள்ளது.

    • கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
    • நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மாண்டி தொகுதியில் பதவியேற்ற கங்கனா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

    அந்தவகையில் கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

    இதையடுத்து வருண் தனது இன்ஸ்டாகிராமில், "நன்றி தீதி கங்கனா ரணாவத். இப்போது சண்டிகரில் வீடு உள்ளது," என்று படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

    வருணின் மனைவி அஞ்சலி ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் புதிய வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களை பதிவிட்டு, கங்கனாவை "அன்பு, அடக்கம் மற்றும் தைரியம்" என்றும் பாராட்டியுள்ளார்.

     

    • சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.
    • ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

    சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
    • இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    பிரபல நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்.

    இதில் ஆலியா குறைந்த மேக்கப்புடன் முழு வெள்ளை நிற சல்வார்  உடையணிந்துள்ளார். அதே போல ரன்பீர் ஜீன்ஸ் பேண்ட் - சாம்பல் நிற டி-ஷர்ட் மேல் நீல நிற டெனிம் சட்டையுடன் சாதாரண தோற்றத்துடன் உடை அணிந்துள்ளார்.

    சல்மான் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கத்ரீனாகைப் உடன் டேட்டிங் செய்தனர். ஆனால் சல்மான்கான் விக்கி கவுஷலை மணந்தார். ரன்பீர் ஆலியா பட்டை 2022 -ல் திருமணம் செய்து கொண்டார்,ரன்பீருக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.கடந்த பல வருடங்களாக ரன்பீரும் சல்மானும் பேசிக்கொள்ள வில்லை.



    இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு எதிர்பாராத சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    தற்போது அலியா பட் ஜிக்ரா  மற்றும்  லவ் & வார்  ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவரது கணவர் ரன்பீர் கபூர் தற்போது நித்தேஷ் திவாரியின்  ராமாயண படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

    அதே போல் சல்மான்கான் கடைசியாக கத்ரீனா கைப் ஜோடியாக டைகர் 3 -ல் நடித்தார். சல்மான் தற்போது அடுத்த புதிய படம் குறித்து ரம்ஜான் தினத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
    • வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.

    அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.

    கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.

    அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.

    4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.

    வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.

    இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.

    பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.

    இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.

    இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.

    இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

    ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
    • வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பின்னலாடை தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்துள்ள தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி .வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன், பனியன் சங்க பொதுச்செயலாளா் என்.சேகா் உள்ளிட்டோா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த தொழிலாளா்கள் வாங்கும் ஊதியத்தில் ஒருபகுதி வீட்டு வாடகைக்கே செலவாகிறது. வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. திருப்பூா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு வழங்கக் கோரி ஏஐடியூசி., சங்க உறுப்பினா்கள் 1,400 போ் மனு அளித்துள்ளனா். இதில் 800 மனு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவில்லை. எனவே மீதம் உள்ளவா்களுக்கும் கடிதம் வழங்குவதுடன், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியாக ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மேலும் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பின்னலாடை தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது
    • வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த உடும்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடும்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.

    கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.

    • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

    முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

    மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×