search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் பேராசிரியர் வீட்டில் பூட்டை  உடைத்து பணம் திருட்டு
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் பேராசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

    • வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மு.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருக வீரக்குமார் (வயது 43) .இவர் கோயம்புத்தூர் அருகே உள்ள சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

    இவர் இந்த மாதம் கடந்த 9 ந்தேதி அன்று வெள்ளகோவில் வீட்டிற்கு வந்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் 22 ந்தேதி அன்று மாலை இவரது வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது, உடனே அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து சென்றனர். கோவையில் இருந்த திருமுருக வீரக்குமாருக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். உடனே புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பேராசிரியர் திருமுருக வீரக்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×