என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Break door"

    நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை போனது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).

    இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

     இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.

    இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    ×