என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்25 May 2022 9:41 AM GMT (Updated: 25 May 2022 9:41 AM GMT)
நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை போனது.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).
இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).
இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X