search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே வீடு கட்ட விடாமல் தடுப்பதாக தி.மு.க.வினர் மீது புகார்
    X

    கோப்புபடம்.

    உடுமலை அருகே வீடு கட்ட விடாமல் தடுப்பதாக தி.மு.க.வினர் மீது புகார்

    • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனுத்து பகுதியில் வினிதா , ராஜேஸ்வரி, துளசிமணி ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் மேற்கண்டவர்களுக்கு பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு. க. வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிகள் செய்ய விடாமல் தடுத்தி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் . ஆகையால் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தற்கொலை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×