search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk members"

    • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனுத்து பகுதியில் வினிதா , ராஜேஸ்வரி, துளசிமணி ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் மேற்கண்டவர்களுக்கு பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு. க. வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிகள் செய்ய விடாமல் தடுத்தி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் . ஆகையால் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தற்கொலை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    நாமக்கல்லில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்நிலைய வாசலில் அமர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 61 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனை வரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், இளைஞர் அணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, சவுந்தர், நகர செயலாளர் முருகேசன், கதிரவன், ராஜேந்திரன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×