search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைத்து"

    • பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கலைஞர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 59). இவரது மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் வசித்து வருகிறார். இதனால் விஜயலட்சுமி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை பயன்படுத்தி யாரோ சில மர்ம ஆசாமிகள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அவர்கள் அங்கிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். உடனே அவர்கள் இது பற்றி காணி மடத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு தகவர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி அங்கு இருந்து தனது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றிய அவர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் தடைய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடையங்களை பதிவு செய்தனர். எவ்வளவு நகை, பணம் கொள்ளை அடிக்கபட்டு உள்ளது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்று விடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கி ழமை கடைக்கு விடுமுறை அளிக்கப்ப ட்டு இருந்தது.

    இந்நிலை யில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சுதா–கர் வந்தார். அப்போது கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போக வில்லை.

    இது குறித்து சுதாகர் வீரப்பன் சத்திரம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

    இதில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்பு நபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி யது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற–னர்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (வயது 63). அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் வெளியூரில் உள்ளதால் அடி க்கடி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ஆறுமு கத்தின் உறவினர் அந்த வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. ஆனால் அங்கு பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
    • மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.கோவில் தினமும் காலை திறக்கப்பட்டுஇரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதே போல்நேற்று இரவும் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது 2 கோவில்களின் உண்டியல்கள்உடைக்க ப்பட்டு அதில்இருந்த காணிக்கை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை நடந்த கோவிலுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டியல் மற்றும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரு. 20 ஆயிரமும், முருகன் கோவில் உண்டியலில் ரு. 5 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே வையாபுரி விளக்கு ரோட்டில் வசித்து வருபவர் லட்சுமணன் மனைவி மல்லிகா(வயது 53) . இவர்அரசமலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார். அப்போது மூத்த மருமகள் நித்தியகல்யாணி என்பவர் மல்லிகாவிடம் சாவியை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிரச்சிஅடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 7பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ5ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து புகாரின் பேரில் காரையூர் போலீசார் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையில் கொள்ளையடித்தனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் நாராயணன் (வயது 27) இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் கார்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் நேற்று மதியம் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.அதே போல் இவரது கடைக்கு அருகில் ஏழுமலை என்பவரின் கண்ணாடி கடையில் இருந்த 85 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அமானி கொண்டலாம்பட்டி எஸ். நாட்டமங்கலம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவரும் இவரது மனைவியும் அந்த பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கணவன் -மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 5 கிராம் தங்க கம்மல்கள், பணம் ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுப்பிரமணி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் பூட்டை உடைத்து கொள்ளையடித்தனர்.
    • சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் தியாக பரமம் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 54).

    இவர் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தை ராசிபுரம் பகுதிக்கு மாறுதல் செய்வதற்காக கடந்த 6 மாத காலமாக பூட்டி வைத்திருந்தார். நேற்று காலை சென்றபோது நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மின்மோட்டார் உட்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×