search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடிய வாலிபர் கைது"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60) இவர் கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்று ரூ.5 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது பைக்கின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வழியில் சோளிங்கர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்தபோது பைக் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலாஜாவை சேர்ந்த பிரதீப்குமார் (22) என்பவர் கோவிந்தராஜின் பணத்தை திருடியது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

    • 15 வாகனங்கள் பறிமுதல்
    • ெஜயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாம லேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பத்தை சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்துவிசாரணையில் அவர் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட

    சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37).இவர் தோட்டப்பாளையம் காட்பாடி மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் சிமெண்ட் கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த 5 செல்போன் மற்றும் செல்போன் சம்பந்தப்பட்ட ரூ.15,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணிகண்டன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    மேலும் தோட்டப்பா ளையம் காட்பாடி ரோட்டில் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் செல்போன் கடையில் கொள்ளையடித்து விட்டு சென்ற மர்ம நபர்கள் படம் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 26) மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. இதில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அலுமினிய பொருட்கள் அபேஸ்
    • போலீசுார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டைமாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கயூம் (வயது 39). இவர் அதேப் பகு தியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பயிற்சி பள்ளியை திறக்காமல் மூடியே வைத்துள்ளார். பின் னர் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து உள்ளார். அப்போது பயிற்சி பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அலுமினிய பொருட்கள், ஒயர் மற்றும் கருவிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அப்துல் கயூம், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அன்சாரி (21) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசா ரணையில் அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடியது தெரியவந்தது. அதைத்தொ டர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நல்ல தண்ணீர் குளம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் போத்தனூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 27 -ந் தேதி விடுமுறையில் பள்ளிப்பட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர் விடுமுறை முடித்து 29-ந் தேதி மீண்டும் பணிக்கு செல்ல ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் கணேசன் பயணம் செய்து கொண்டிந்தார்.

    அப்போது சிறிது நேரம் அசந்து தூங்கினார். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரும்போது விழித்துப் பார்த்தபோது மேல்பாக்கெட்டில் வைத்து இருந்த சுமார் ரூ.10,000 மதிப்புள்ள செல்போன், மாயமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வேடல் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர் (34) என்பவர் கணேசன் செல்போனை திருடியது ெதரிந்தது.

    பின்னர் செல்போன் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன் திருடிய சங்கரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினார்
    • தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் அரக்கோணம், புளியமங்க லம் மற்றும் மோசூர் ஆகிய ரெயில் நிலையங்களிளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்த னர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோ ணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வசந்த ராஜ் (வயது 30), என்பதும், ரெயில் பயணிகளிடம் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த தும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல் போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.

    அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி புது பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அர்பாத் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகத் அலி என்பவரது மகன் நியாஷ் அகமது (20) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது போல் நடித்து தொடர் செல்போன் திரு ட்டில் ஈடுப ட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 12 பவுன் நகை அபேஸ்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டைமாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 68) என்பவ ரது வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் நேற்று காலை புதுகேசாவரம் பகுதி யில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாணாவரம் பகுதியை சேர்ந்த மதன் (30) என்பதும், முனுசாமி வீட்டில் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதனை கைது செய்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்.
    • 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

    உடுமலை :

    உடுமலையையடுத்த வெஞ்சமடை முத்துச்சாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் சிவசாமி(வயது 55).இவர் உடுமலை பஸ் நிலையம் எதிரே துணிக்கடை வைத்துள்ளார்.இந்தநிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி இவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சிவசாமி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா,சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார்,தலைமைக் காவலர் பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் முத்துமாணிக்கம், மணிகண்டன் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.200 க்கும் மேற்பட்ட சிசிடிவி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.இதில் குற்றவாளிகள் சொகுசு காரில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.அத்துடன் குற்றவாளிகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்தது.இதனையடுத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று உடுமலை தாராபுரம் சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.அவர்களிடமிருந்து 4 1/2 பவுன் நகையை கைப்பற்றினர்.அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தங்கராஜ்(வயது 38),திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தினேஷ்(என்ற)தினேஷ்குமார் என்பது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தது.

    குற்றவாளி தங்கராஜின் அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்கும் விதமாக கடந்த 2 வாரங்களுக்கு முன் சிவகங்கையில் வைத்து ஒருவரைக் கொலை செய்து விட்டு தப்பி வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கோவை,திண்டுக்கல்,தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.

    • 2 பேர் நகைக்கடைக்கு வந்து மோதிரம் வாங்குவதாக கூறி வந்தனர்.
    • கடை ஊழியர்கள் அவரை துரத்தி பிடித்து வந்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ரவி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை, 2 பேர் நகைக்கடைக்கு வந்து மோதிரம் வாங்குவதாக கூறி வந்தனர். பின்னர் கடை ஊழியர், 4 பவுன் கொண்ட 8 மோதிரத்தை எடுத்து வைத்துள்ளார்.

    அப்போது நகை வாங்க வந்தவர்களின் ஒருவர் வெளியே சென்றுவிட்டார். மற்றொரு நபர் அங்கிருந்த தங்க மோதிரத்தை திருடி சென்று ஓடினார். பின்னர் கடை ஊழியர்கள் அவரை துரத்தி பிடித்து வந்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், மோதிரத்தை திருடிசெல்ல முயன்றவர்கள், பென்னாகரம் அடுத்த கோடப்பட்டியை சேர்ந்த பிரதாப் (வயது 23) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியது சபரியை தேடி வருகின்றனர். பின்னர் போலீசார் பிரதாப்பிடமிருந்த தங்க மோதிரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.
    • விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கொட்டகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி பாக்கியம்மாள் (வயது 48).

    இவர் வீட்டில் தனியாக இருந்த போது பின்புற கதவை மர்ம நபர்கள் உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் பாக்கியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது. உடனே முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ×