search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு நகைக்கடையில்  திருடிய வாலிபர் கைது
    X

    பிரதாப்

    பாலக்கோடு நகைக்கடையில் திருடிய வாலிபர் கைது

    • 2 பேர் நகைக்கடைக்கு வந்து மோதிரம் வாங்குவதாக கூறி வந்தனர்.
    • கடை ஊழியர்கள் அவரை துரத்தி பிடித்து வந்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ரவி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை, 2 பேர் நகைக்கடைக்கு வந்து மோதிரம் வாங்குவதாக கூறி வந்தனர். பின்னர் கடை ஊழியர், 4 பவுன் கொண்ட 8 மோதிரத்தை எடுத்து வைத்துள்ளார்.

    அப்போது நகை வாங்க வந்தவர்களின் ஒருவர் வெளியே சென்றுவிட்டார். மற்றொரு நபர் அங்கிருந்த தங்க மோதிரத்தை திருடி சென்று ஓடினார். பின்னர் கடை ஊழியர்கள் அவரை துரத்தி பிடித்து வந்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், மோதிரத்தை திருடிசெல்ல முயன்றவர்கள், பென்னாகரம் அடுத்த கோடப்பட்டியை சேர்ந்த பிரதாப் (வயது 23) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியது சபரியை தேடி வருகின்றனர். பின்னர் போலீசார் பிரதாப்பிடமிருந்த தங்க மோதிரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×