search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
    X

    ரெயில்வே ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நல்ல தண்ணீர் குளம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் போத்தனூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 27 -ந் தேதி விடுமுறையில் பள்ளிப்பட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர் விடுமுறை முடித்து 29-ந் தேதி மீண்டும் பணிக்கு செல்ல ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் கணேசன் பயணம் செய்து கொண்டிந்தார்.

    அப்போது சிறிது நேரம் அசந்து தூங்கினார். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரும்போது விழித்துப் பார்த்தபோது மேல்பாக்கெட்டில் வைத்து இருந்த சுமார் ரூ.10,000 மதிப்புள்ள செல்போன், மாயமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வேடல் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர் (34) என்பவர் கணேசன் செல்போனை திருடியது ெதரிந்தது.

    பின்னர் செல்போன் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன் திருடிய சங்கரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×