என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் திருடிய வாலிபர் கைது
- 12 பவுன் நகை அபேஸ்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டைமாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 68) என்பவ ரது வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று காலை புதுகேசாவரம் பகுதி யில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாணாவரம் பகுதியை சேர்ந்த மதன் (30) என்பதும், முனுசாமி வீட்டில் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதனை கைது செய்தனர்.
Next Story






