என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக்கில் இருந்து ரூ.5 லட்சம் திருடிய வாலிபர் கைது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60) இவர் கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்று ரூ.5 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது பைக்கின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது வழியில் சோளிங்கர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்தபோது பைக் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலாஜாவை சேர்ந்த பிரதீப்குமார் (22) என்பவர் கோவிந்தராஜின் பணத்தை திருடியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்