search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயக்க மருந்து"

    • பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
    • அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

    அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

    இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாணவியை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகும். நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறேன்.

    காரமடை அருகே எனது உறவினர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் தான் நான் கல்லூரியில் தங்குவதற்கு பாதுகாவலராக இருந்து வருகிறார். என்னை ஊருக்கு அழைத்து செல்வது, திரும்ப கல்லூரியில் கொண்டு வந்து விடுவதும் அவர் தான்.

    எனது சொந்த ஊர் ஊட்டி என்பதால் அடிக்கடி அங்கு செல்ல முடியாது. இதனால் நான் காரமடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வார இறுதிநாட்களில் சென்று விடுவேன். அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்து விடுவேன்.

    எனது உறவினர் வீட்டில் அவருடன், அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரரும் இருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி நான் கல்லூரியில் இருந்து எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்தேன்.

    அன்று இரவு உறவினரின் மைத்துனர் கணேசன், குளிர்பானம் வாங்கி வந்து என்னை குடிக்குமாறு கூறினார். நான் செல்லும் நேரங்களில் எல்லாம் அவர் இதுபோன்று குளிர்பானம் வாங்கி தந்ததால் நானும் மறுப்பு தெரிவிக்காமல் அதனை வாங்கி குடித்தேன்.

    குடித்த சில நிமிடங்களில் எனக்கு சோர்வு ஏற்பட்டு என்ன நடப்பது என்றே தெரியாமல் மயங்கி விட்டேன். அந்த சமயம், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.மறுநாள் காலை எனது அறையில் இருந்து அவர் ஓடியதை பார்த்த நான், கண்விழித்த பின்பு இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் அதற்கு இதனை யாரிடமாவது தெரிவித்தால் என்னையும், என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நானும் பயந்து போய் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நான் எனது சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து எனது தாய் என்னை ஊட்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியான எனது தாய், என்னிடம் விசாரித்தார்.

    அப்போது நான் எனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் கூறி விட்டேன். அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து கோவைக்கு வந்து விட்டோம். தற்போது நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

    என்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    • ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
    • அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 60). இவரது இடுப்பு எலும்பில் சவ்வு கிழிந்துள்ளதால், அவருக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதற்காக அவருக்கு மயக்க மருந்து செலுத்தி இருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து பல மணி நேரமாகியும் அவர் மயக்கத்தில் இருந்து தெளியவில்லை.

    இதை அடுத்து டாக்டர்கள் பெரியம்மாளை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    • குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடியதாக தெரிகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 80). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாசிலாமணி திண்டுக்க ல்லில் உள்ள மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று நிலக்கோ ட்டையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வ தற்காக மாசிலாமணி திண்டுக்கலில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள மாதா கோவிலில் சிறிது நேரம் இளைப்பாற தங்கியுள்ளார்.

    அப்போது 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாசிலாமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே மாசிலா மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த பெண், தான் நீரேத்தானில் உள்ள நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறிகேட்க செல்வதாக கூறியுள்ளார். உடனே மாசிலாமணியும் தானும் வருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து இருவரும் நீரேத்தானுக்கு புறப்பட்டு சென்றனர். யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றபோது அந்த பெண் மாசிலாமணிக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறை கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அந்த பெண், மூதாட்டி அணிந்திருந்த இருந்த 5 பவுன் நகை, பையில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். சில மணிநேரம் கழித்து விழித்தெழுந்த மாசிலா மணி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பையில் வைத்திருந்த பணம் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னுடன் வந்த பெண்ணை தேடிப்பார்த்த போது அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதனால் தனது நகை மற்றும்ம பணத்தை அந்த பெண் தான் திருடி இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாசிலாமணியுடன், ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

    அந்த பெண் தான் தன்னிடம் பேச்சு கொடுத்த தாகவும், மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை தந்ததாகவும் மாசிலாமணி அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சியில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற பெண்ணின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர் சிக்கிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×