என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dental hospital"

    • பல் ஆஸ்பத்திரியில், சலைன் பாட்டிலை திறக்க சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தி உள்ளனர்.
    • நோயாளிகளின் வாய்வழியாக நரம்புப்பாதையில் நுழைந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023-ம் ஆண்டு ஒரு பல் ஆஸ்பத்திரியில் பல் சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு பாக்டீரியா தொற்று தாக்கி உள்ளது. இது, மூளையில் தாக்கும் நரம்பியல் சார்ந்த பாக்டீரியா தொற்று ஆகும்.

    தொற்று தாக்கிய 16 நாட்களுக்குள் 10 பேரில் 8 பேர் இறந்து விட்டனர்.

    இதுகுறித்து எந்த அரசு நிறுவனமும் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் குழு விசாரணையை தொடங்கியது.

    அந்த விசாரணையில், வாணியம்பாடியில் உள்ள பல் ஆஸ்பத்திரிக்கும், தொற்று பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதற்குள் அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

    டாக்டர்கள், மாதிரிகளை சேகரித்து சோதனை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. பல் ஆஸ்பத்திரியில், சலைன் பாட்டிலை திறக்க சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தி உள்ளனர்.

    பின்னர், அந்த பாட்டிலை மீதி திரவத்துடன் அப்படியே மூடி வைத்துள்ளனர். நோயாளிகளின் வாயை சுத்தப்படுத்த அந்த திரவத்தை மீண்டும் பயன்படுத்தி உள்ளனர்.

    இதன்மூலம், நோயாளிகளின் வாய்வழியாக நரம்புப்பாதையில் நுழைந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இது, நரம்பு மண்டலத்தை மொத்தமாக பாதிக்கும் தொற்று ஆகும். காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்புவாதம், மூளை சீழ்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள்.

    8 நோயாளிகளும், தொற்று தாக்கியதில் இருந்து 16 நாட்களிலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 9 நாட்களிலும் இறந்து விட்டனர்.

    அதே காலகட்டத்தில், திருப்பத்தூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில், மேலும் 11 பேருக்கும் இதே பாக்டீரியா தொற்று தாக்கி இருந்தது. ஆனால் அவர்கள் அந்த பல் ஆஸ்பத்திரிக்கு செல்லாதவர்கள்.

    இருப்பினும், எப்படியோ தொற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். ஆனால், தொற்று தாக்கிய 56 நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாக்டீரியா தொற்றால் 8 பேர் பலியானதாக மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்ததையடுத்து வி.டி.எஸ். தனியார் பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.

    திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
    • அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

    அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

    இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பணியாளர்கள் அனைவரும் இரவு பணிகள் முடிந்து ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.
    • அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது

    நெல்லை:

    வள்ளியூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தபோது அங்கு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் டாக்டரான குமரி மாவட்டம் ஆலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முகமது ஹாசன்(வயது 52) வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×