search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் பல் ஆஸ்பத்திரியில் பணம் கொள்ளை
    X

    வள்ளியூரில் பல் ஆஸ்பத்திரியில் பணம் கொள்ளை

    • பணியாளர்கள் அனைவரும் இரவு பணிகள் முடிந்து ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.
    • அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது

    நெல்லை:

    வள்ளியூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தபோது அங்கு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் டாக்டரான குமரி மாவட்டம் ஆலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முகமது ஹாசன்(வயது 52) வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×