search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி மரணம்
    X

    ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி மரணம்

    • ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
    • அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 60). இவரது இடுப்பு எலும்பில் சவ்வு கிழிந்துள்ளதால், அவருக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதற்காக அவருக்கு மயக்க மருந்து செலுத்தி இருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து பல மணி நேரமாகியும் அவர் மயக்கத்தில் இருந்து தெளியவில்லை.

    இதை அடுத்து டாக்டர்கள் பெரியம்மாளை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×