search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் லாரி திருடிய வாலிபர் கைது
    X

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் லாரி திருடிய வாலிபர் கைது

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் லாரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இவர் திருப்பூர் ரெயில் நிலையம் குட்செட் பகுதியில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மதியம் சாப்பிட சென்ற ராஜ்குமார் மீண்டும் வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.

    இதுகுறித்து அவர் திருப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் போலீசார் சோதனை சாவடி அருகே நின்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருடப்பட்ட லாரியை போலீசார் நிறுத்தினர். அதை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த பார்த்திபன்(27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×