என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் லாரி திருடிய வாலிபர் கைது
திருப்பூர்:
திருப்பூர் அவினாசி சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இவர் திருப்பூர் ரெயில் நிலையம் குட்செட் பகுதியில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மதியம் சாப்பிட சென்ற ராஜ்குமார் மீண்டும் வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.
இதுகுறித்து அவர் திருப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் போலீசார் சோதனை சாவடி அருகே நின்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருடப்பட்ட லாரியை போலீசார் நிறுத்தினர். அதை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த பார்த்திபன்(27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்