search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய வாலிபர் கைது
    X

    மேலப்பாளையத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய வாலிபர் கைது

    • மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார்.
    • போலீசார் மர்மநபரை கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை ரெட்டியார்பட்டி பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா(வயது 37). இவர் மேலப்பாளையம் குறிச்சி முக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

    அதில் கடையில் பணத்தை திருடியது நெல்லையை அடுத்த மருதகுளத்தை சேர்ந்த மில்டன்(வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    கைது

    கைது செய்யப்பட்ட மில்டன்மீது நெல்லை, விருதுநகர், குமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதாய கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    Next Story
    ×