search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shastri"

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஏற்றார். 2019-ம் ஆண்டில் அவரது பதவி காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு வருகிற 17-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.

    59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியை கூட எட்டவில்லை.

    அதே சமயம் அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது. 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
    நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து செல்லும் முன் பேட்டி அளித்துள்ளார்.

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து செல்கிறது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    முந்தைய உலக கோப்பையை விட தற்போதைய தொடர் சவாலனாதாக இருக்கும். 2015-ம் ஆண்டை விட தற்போது ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் அணி வலுவானதாக உள்ளது. சவாலை முறியடித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.

    இங்கிலாந்து ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறேன். இந்திய அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ஆட்டம் இந்த உலக கோப்பையில் பெரும் பங்கு வகிக்கும். அவரின் சிறு செயல்பாடுகள் கூட போட்டியின் ஆட்டத்தை மாற்ற கூடியது.

    இந்திய அணி வீரர்கள் சவாலை கருத்தில் கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    உலகக்கோப்பைக்கான காம்பினேசன், 4-வது இடத்திற்கு யார்? உள்பட பல்வேறு சந்தேகங்களுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடும் திறமை பெற்றவர்கள். நாங்கள் ஒரு பிளெக்சிபில் அணி. இந்தியா பந்ததையத்திற்கான குதிரை. பந்தயத்தில் வெல்வதற்கான போதுமான ஆயுதங்களை பெற்றுள்ளோம். நம்பர் 4-ல் களம் இறங்கி விளையாட போதுமான வீரர்களை பெற்றுள்ளோம். ஆகவே, நாங்கள் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

    நாங்கள் அனைத்து பகுதிகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) ஆதிக்கம் செலுத்தும் வகையிலான அணியை பெற்றுள்ளோம். தொடருக்கு பயணம் செய்ய வேண்டும், தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரும் அதில் இருக்க வேண்டும் என்பதுதான் கடைசி கட்ட எண்ணமாக இருக்கிறது.



    வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் மிகவும் மோசமான அளவிற்கு காயம் அடைந்தால், மாற்று வீரரை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் 22-ந்தேதிதான் இங்கிலாந்து புறப்பட இருக்கிறோம். அதில் 15 பேரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாக கேதர் ஜாதவுக்கு எழும்பு முறிவு ஏற்படவில்லை. ஆகவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போதுமான காலஅவகாசம் இருக்கிறது’’ என்றார்.
    ‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். #RaviShastri #ViratKohli
    துபாய்:

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

    அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும். முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4-வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.



    இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘டாப்-3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். அதனால் இப்போதைக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RaviShastri #ViratKohli
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார். #RaviShastri #WorldCup
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்புக்கு வந்த இவர்களின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைகிறது.

    முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவிசாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிடித்தமானவராக இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. உலக கோப்பை போட்டிக்கு பிறகும் கூட அவர் தான் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள். ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டதில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பங்களிப்பு முக்கியமானது என்று இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி சொல்வார்.

    ஆனால் பதவி காலம் முடிந்ததும் அவரை அந்த பணியில் நீட்டிக்க வைப்பதோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதோ முடியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. உலக கோப்பையை இந்திய அணி வென்றாலும் கூட அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது. ஏனெனில் அந்த வகையிலான பிரிவுகள் எதுவும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர ரவிசாஸ்திரி விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நேரடியாக இறுதிக்கட்ட பட்டியலில் இடம் பெற அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சச்சின் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்துவார்கள்.

    உலக கோப்பை போட்டி ஜூலை 14-ந்தேதி நிறைவடைகிறது. அந்த மாதத்தின் இறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதாவது 14 நாட்களில் அந்த தொடர் தொடங்குகிறது. எனவே பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை அதற்குள் முடிவடையாவிட்டால் இடைக்கால பயிற்சியாளர் இந்திய அணியுடன் அனுப்பி வைக்கப்படுவார். #RaviShastri #WorldCup
    ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை விராட் கோலி நினைவுப்படுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #RaviShastri
    வெல்லிங்டன்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஜொலிக்கிறார்.

    கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார். சிறந்த வீரர், டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐ.சி.சி. விருதுக்கு தேர்வான உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி பெற்றார்.

    இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை அவர் நினைவுப்படுத்துகிறார் என்று பாராட்டியுள்ளார்.

    நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விராட்கோலி ஒரு அடையாளம். முற்றிலும் மாறுபட்ட வீரர். அவரது தலைமை வேண்டும். அவரைப் போல் உழைக்க யாரும் இல்லை.

    பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

    விராட் கோலி பல வழிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை நினைவுப்படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார்.

    பேட்டிங்கில் அவர் வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ரிச்சர்ட்சை நினைவுப்படுத்துகிறார். நான் பார்த்ததில் கோலி பலமடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    அவர் மேலும் மேலும் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறார். உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விராட்கோலி கடந்த ஆண்டு 13 டெஸ்டில் 1322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். 5 செஞ்சுரியும் அடித்து இருந்தார். 14 ஒருநாள் போட்டியில் 6 சதத்துடன் 1,202 ரன் எடுத்தார். சராசரி 133.55 ஆகும்.

    ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணிக்கு அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #RaviShastri
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய டோனியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார். #AUSvIND #dhoni #RaviShastri

    லண்டன்:

    இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:-

    டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.

    ஆகவே தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

    ரிசப்பன்ட் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்டகாலம் இருப்பது போல் இன்னொருவர் உருவாவது கடினம்.

    ரிசப்பன்டின் ஹீரோ டோனி தான். ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய வி‌ஷயமாகும்.


    இதேபோல வீராட் கோலி- டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்றாகும். இதனால் ஓய்வு அறையில் எனது பணி எளிதாகிறது.

    வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையீடுவது இல்லை. தேவைப்பட்டால் சில வேளைகளில் ஆலோசனை வழங்குவேன்.

    ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறார் என்றால் நான் தலையில் தட்டி சரி செய்வேன். இந்த வி‌ஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார். #AUSvIND #dhoni #RaviShastri

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை நியமித்ததில் விதிமீறல் நடந்ததாக முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி கூறியுள்ளார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்திய 20 ஓவர் போட்டி பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு இ-மெயில் அனுப்பினர். அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் அரைஇறுதியில் தன்னை வேண்டுமென்றே ரமேஷ் பவார் ஓரங்கட்டியதாகவும், பலமுறை அவர் தன்னை அவமதித்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.



    ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ்ஷா உள்ளிட்டோர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மறுபடியும் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

    இதற்கிடையே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயம், பெண்கள் அணியின் கேப்டனுக்கு ஒரு நியாயமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்கள் அணிக்கான முந்தைய பயிற்சியாளர் கும்பிளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை இப்போது கசியவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக டயானா எடுல்ஜி கூறியதாவது:-

    கும்பிளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தார். கும்பிளேவின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அவரையே தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க செய்ய தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால், கோலியிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரவிசாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே கோலியின் ஆசை. காலக்கெடுவுக்குள் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது முற்றிலும் விதிமீறல் என்று அப்போது எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். கும்பிளே ஒரு ஜாம்பவான். இந்த விவகாரத்தில் அவர் அவமதிக்கப்பட்டார். வில்லன் போல் அவரை சித்தரித்தனர். ஆனாலும் பெருந்தன்மையுடன் எதை பற்றியும் பேசாமல் அவர் ராஜினாமா செய்தார். எது எப்படி என்றாலும் ரவிசாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதே உண்மை.

    கும்பிளே வேண்டாம் என்று கோலி கூறிய போது செவி சாய்த்தீர்கள். இதே போல் பெண்கள் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது. அணியின் முக்கிய வீராங்கனைகளான அவர்களின் கருத்தை நாம் புறக்கணிக்க கூடாது. பயிற்சியாளர் குறித்து அவர்கள் இ-மெயில் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. அணியின் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி அல்ல. கும்பிளேவை நீக்கும்படி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு தொடர்ச்சியாக தகவல்கள் அனுப்பி மறைமுக நெருக்கடி கொடுத்தார்.

    இவ்வாறு கூறியுள்ள எடுல்ஜி, ரமேஷ் பவாருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளார். பயிற்சியாளரை வீராங்கனைகளின் ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது என்று ஏற்கனவே கைவிரித்து விட்ட வினோத் ராய், கும்பிளேவுக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதன் தொடர்ச்சியாகவே அவர் விலகினார் என்றும் குறிப்பிட்டார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    1947-ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்தை இந்திய அணியினர் நேற்று போக்கினார்கள்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பு மிக்க வெற்றியை தனதாக்கியது. பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது வீரர்களுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். நல்ல தொடக்கம் காண்பது நம்பிக்கையை அளிக்கும்.

    இந்த போட்டி தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் வலைப்பயிற்சியில் அதிக நேரத்தை செலவிடாமல் தவிர்க்க வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் அதிக வேகம் கொண்டதாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
    முதல் இன்னிங்சில் நமது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். புஜாரா மிகவும் அருமையாக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்ட் நன்றாக செயல்படுகிறார். நாதன் லயன் கேட்ச்சை கோட்டை விட்டது போன்ற தவறை அவர் மீண்டும் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். #IndianTeam #RaviShastri
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.

    அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘தென்ஆப்பிரிக்கா (1-2) மற்றும் இங்கிலாந்தில் (1-4) டெஸ்ட் தொடரை தாரைவார்த்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியமானது’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது சற்று கோபித்துக் கொண்டார்.

    “வெளிநாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள். சமீப காலமாக நடந்த வெளிநாட்டு தொடர்களை உற்று பார்த்தால், பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் சோபிக்கவில்லை என்பது தெரியும். 1990-களில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 2000-ம் ஆண்டு வரை அந்த அணி வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தது. அதே போல் தென்ஆப்பிரிக்காவும் சில ஆண்டுகள் அசத்தியது. இவ்விரு அணிகளையும் தவிர்த்து கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த அணி வெளிநாட்டில் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள்?” என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இவ்விரு தொடரின் முடிவுகளும் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்வேன். ஏனெனில் உண்மையிலேயே சில போட்டிகள் நீயா-நானா? என்று கடும் நெருக்கமாக நகர்ந்தது. சில முக்கிய கட்டத்தில் தடுமாறியதால் தொடரை இழக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

    ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி விட்டதா? என்ற இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சாஸ்திரி, ‘நான் அப்படி நினைக்கவில்லை. உள்ளூரில் எந்த அணியும் வலு குறைந்தது கிடையாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வரும் போது 3-4 வீரர்கள் விளையாட முடியாமல் போவது உண்டு. ஆனாலும் யாரும் இந்தியா பலவீனமான அணி என்று சொன்னது இல்லை. மற்றவர்களின் கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக செயல்பட்டால், எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.

    இந்திய பந்து வீச்சு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ‘கடந்த காலங்களில் நாங்கள் பார்த்தது போலவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஒரு அணியாக அனைவரும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயத்தால் அவதிப்படுகிறார்) இல்லாதது உண்மையிலேயே பின்னடைவு தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ள முடியும். இப்போது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிய அளவில் தெரியாது.’ என்றார்.
    இளம் வீரரான பிரித்வி ஷா சில நேரம் சச்சினாகவும், சில நேரம் சேவாக்காகவும், சில நேரம் லாராவாகவும் தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #RaviShastri
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ராஜகோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.



    ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.



    பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.



    அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.

    தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    ×