என் மலர்
நீங்கள் தேடியது "sehwag"
- ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சேவாக்கின் சாதனையை ரோகித் முறியடித்தார்.
15758 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த விரேந்தர் சேவாக் சாதனையை 15,787 ரன்கள் அடித்து ரோகித் முறியடித்து அசத்தியுள்ளார். ரோகித், சேவாக்கிற்கு அடுத்தபடியாக 15,335 ரன்கள் அடித்து சச்சின் 3 ஆம் இடத்தில உள்ளார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.
தற்போது ரிஷப் பண்ட் 88 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித்துடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.
- சிமர்ஜித் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- திக்விஜய் சிங் 38 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆர்யாவிர்-ஐ சென்டிரல் டெல்லி கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
விராட் கோலியின் உறவினராக ஆர்யாவீர்-ஐ சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் 1 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங் 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங்கை 38 லட்சம் ரூபாய்க்கு சவுத் டெல்லி சூப்பார் ஸ்டார்ஸ் ஏலம் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட்-ஐ பூரணி டில்லி 6 அணி தக்க வைத்துள்ளது.
சேவாக் மகன் ஆர்யாவீர் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ஆவார். இவர் டெல்லி U-19 அணிக்காக விளையாடியுள்ளார்.
- சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.
அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
- ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.
இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.
அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.
அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.
குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.
அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.
அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.
ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
- இவருடன் டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரும் பட்டியலில் இணைந்து உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் 103 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒருநாள் போட்டியில் 15 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் அடித்துள்ளார்.
- ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை
- டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அழுத்தம் ஏற்படும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
அஷ்வின் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
- மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
- மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை
நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.
மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?
குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
- அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன்.
- அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். இவர் தோஷம் (Tosham) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அரியான மாநில முதல்வர் பான்சி லால் பேரன் அனிருத் சவுத்ரிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரேந்திர சேவாக் கூறுகையில் "அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன். அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார். அவருக்கு இது மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்று. அவருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். தோஷம் தொகுதியில் உள்ளவர்கள் அனிருத் சவுத்ரி வெற்றிக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன்" என வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தோஷம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அனிருத் சவுத்திரி (48) முன்னாள் பிசிசிஐ தலைவர் ரன்பீர் மஹேந்திராவின் மகன் ஆவார். இவர் அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்து பான்சி லால் பேரன் ஆவார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பான்சி லாலின் இளைய மகன் சுரேந்தர் சிங்கின் மகள் ஸ்ருதி சவுத்ரி (48) போட்டியிடுகிறார். இதனால் தோஷம் தொகுதி குடும்ப விவகாரமாகியுள்ளது.
"விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது. இதனால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை சரி செய்வதில் அரசு தோற்றுவிட்டது. இந்த பகுதியில் முன்னேற்றம் இல்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
பான்சி லால் குடும்பத்தின் கோட்டையாக தோஷம் தொகுதி விளங்குகிறது. பான்சி லால் இந்த தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். சுரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி கிரண் சவுத்ரி பலமுறை வெற்றி பெற்றுள்ளனர். 2019-ல் கிரண் சவுத்ரி 18059 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்திருந்தார்.
- 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார்.
- எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் சீசனில் நடந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறி வருகிறார்.
அந்த வகையில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் இருக்கும் போது சேவாக் உடனான கசப்பான நினைவுகளை மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.
அதில், 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார். பிளே ஆப்-க்கு செல்லவில்லை என்றாலும் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டதாகவேதே நினைத்தேன். கடைசி போட்டியின்போது அந்த அணியின் கேப்டனாக நான் செய்தியாளர்களை சந்திக்க சென்றேன்.
ஆனால் எனக்கு பதில் சேவாக் செய்தியாளர்களை சந்தித்தது மட்டுமன்றி, நான் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறினார். பின்னா வாட்ஸ்அப் குழுவில் இருந்தும் என்னை நீக்கினார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன். அதற்கு அவர் "உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை" என கூறினார்.
- 229 பந்துகளில் இரட்டை சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- அவரது ஸ்கோரில் 34 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
கூச் பெஹார் கோப்பைக்கான (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட்டில் மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 468 ரன் குவித்து 208 ரன் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் 34 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசி (229 பந்து) களத்தில் உள்ளார்.
17 வயதான ஆர்யவீர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்து வருவதாக ஏற்கனவே சேவாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் சேவாக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.
முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளூரில் விளையாடுவதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.
சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால் சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.






