search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sehwag"

    • கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
    • இவருடன் டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரும் பட்டியலில் இணைந்து உள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் 103 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒருநாள் போட்டியில் 15 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் அடித்துள்ளார்.

    • 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

    அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.

    இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.

    அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.

    அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

    குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.

    அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.

    ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.

    அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.

    அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கி‌ஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

    எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளூரில் விளையாடுவதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.

    சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால் சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இந்திய அணயில் வேறு எந்த வீரரும் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சிக்குப்பின் அமைதியான வீரராக மாறிவிட்டார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 91 ரன்கள் குவித்து அசத்தினார். 15 இன்னிங்சில் 402 ரன்கள் குவித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இவரது பேட்டிங் ஸ்டிரைக் 191.42 ஆகும்.

    இந்நிலையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வீரர் யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.



    ஹர்திக் பாண்டியா குறித்து சேவாக் கூறுகையில் ‘‘பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் யாரும் இல்லை.

    அவருக்கு இணையாக யாராவது ஒருவர் இருந்திருந்தால், மூன்று துறைகளிலும் (பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்- three-dimensional) ஜொலிக்கும் வீரரரை பிசிசிஐ தேர்வு செய்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க முடியாது’’ என்றார்.
    200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சச்சின் தெண்டுல்கர் சாதனையை கோலியால் முறியடிக்க இயலாது என சேவாக் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தி வருகிறார்.

    சமீபத்தில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இதேபோல அவர் பல சாதனைகளை படைக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார். ஆனால் 200 டெஸ்டில் விளையாடிய தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இயலாது என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

    தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார் என்று அனைவரும் நினைக்கிறார்கள். நானும் அதை பலமுறை சொல்லி வருகிறேன். அவர் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கலாம்.



    ஆனால் சச்சின் தெண்டுல்கரின் ஒரே ஒரு சாதனையை அவரால் முறியடிக்க இயலாது. சச்சின் 200 டெஸ்ட்டுகளில் ஆடி இருக்கிறார். இன்னொரு வீரரால் இதை முறியடிக்க இயலாது. 200 டெஸ்டை நெருங்க குறைந்தது 24 ஆண்டுகள் விளையாட வேண்டும்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த சாதனையாக தெண்டுல்கர் இருக்கிறார். 200 டெஸ்டில் விளையாடி 15,921 ரன் எடுத்துள்ளார். சராசரி 53.78 ஆகும்.
    இளம் வீரரான பிரித்வி ஷா சில நேரம் சச்சினாகவும், சில நேரம் சேவாக்காகவும், சில நேரம் லாராவாகவும் தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #RaviShastri
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ராஜகோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.



    ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.



    பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.



    அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.

    தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
    அறிமுக போட்டியில் பிரித்விஷா பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளதால் அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். #ravishastri

    மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

    பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.


    பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.

    பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார்.

    சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. #PrithviShaw #ravishastri #sachin #sehwag 

    சிறந்த வெளிநாட்டு அணியாக இருக்கும் என்று வாய் ஜாலம் காட்டினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என்று ரவி ஷாஸ்திரி மீது சேவாக் சாடியுள்ளார். #ENGvIND
    சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்று 2-1 என்றகணக்கில் இருந்தன. இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

    கடந்த 2011, 2014-ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா, ரகதனே ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று தெரிவித்திருந்தார்.



    இதைக் குறிப்பிட்டு சேவாக் சாடியுள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகள் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவன் மூலம் உருவாக்கப்படுகிறது.  ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை.

    ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் வீரர்களின் பேட் பேசவில்லை என்றால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணியாக முடியாது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    தற்போது முடிந்துள்ள 3 டெஸ்டில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளைமறுநாள் (30-ந்தேதி) சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இரண்டு அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து விளையாட வேண்டும். தலைசிறந்த இவர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும்.

    அஸ்வின் உடற்தகுதி பெறாவிடில், ஒரு சுழற்பந்து வீச்சுடன் விளையாடினால் அது இந்தியாவிற்கு சிக்கலானதாக இருக்கும். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அஸ்வின் உடற்தகுதி பெற வாழ்த்துகிறேன். இரண்டு பேருடன் களம் இறங்க வேண்டும். இரண்டு பேரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அது இந்தியாவிற்கு அதிக வலுவூட்டும்’’ என்றார்.
    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு திரும்ப நினைக்கையில், இந்தியா பசித்த புலிபோல் விளையாடும் என சேவாக் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 30-ந்தேதி தொடங்கும் (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டன் டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்ற நினைக்கும். அதேவேளையில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்பும்.

    நான்காவது டெஸ்டில் இந்தியா பசித்த புலியை போன்று விளையாடும் என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை வைத்து பார்க்கும்போது 4-வது டெஸ்டில் இந்தியா நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி உத்வேகத்தில் உள்ளனர். ஆனால், இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். ஆனால், இந்தியா பசித்த புலிகள் மாதிரி. அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள்.



    தற்போதுள்ள வேகப்பந்து யுனிட் மிகவும் சிறப்பானது. இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி டெஸ்ட் பிளாட் டிரக். அதில் கூட 20 விக்கெட் வீழ்த்த முடியும்.

    ஆஸ்திரேலியா ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சிறந்ததாக இருக்கும். அங்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், வீரர்கள் பெயர்கள் வரலாற்றில் எழுதப்படும். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    ×