search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramya Krishnan"

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தை பார்த்து நாயகிகள் பலரும் பொறாமைப்பட்டனர். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக் குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

    ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முக்கியமாக திரிஷா உள்ளிட்ட சில கதாநாயகிகளே விஜய் சேதுபதியின் தோற்றத்தை பகிர்ந்து இவரை பார்த்தால் எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.



    இந்த தோற்றம் பற்றி தியாகராஜன் குமரராஜா கூறும்போது ‘ஷில்பா கேரக்டரை எப்படி யோசித்து டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புகொண்டது பெரிய வி‌ஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர் ரொம்பவே மெனக்கெட்டார்’ என்று கூறியுள்ளார். #SuperDeluxe #VijaySethupathi

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் 88 ரீடேக் எடுத்ததாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #SuperDeluxe #RemyaKrishnan
    ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற இவர், 7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

    படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    படத்தை தயாரித்து, இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது, ‘இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை.



    இதில் ஒரு முக்கிய வேடத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான ஒரு காட்சியை 88 ரீடேக் எடுத்தோம். இந்த காட்சிக்காகவே நதியா படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்லாம். இரண்டு நாட்களாக நதியாவை வைத்து அந்த காட்சியை படமாக்க முயற்சித்தோம். ரம்யா கிருஷ்ணன் 88வது டேக் எனக்கு திருப்தி அளிக்காவிடில் படத்தை விட்டு வெளியேறுவதாக கூறினார்’. #SuperDeluxe #VijaySethupathi #RemyaKrishnan

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா துணிச்சலான வேடத்தில் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்தார். #SuperDeluxe #Samantha
    ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

    படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.



    ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை’ என்று அவர் கூறினார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத், நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். #SuperDeluxe #Samantha

    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் தேவ் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட ரகுல் ப்ரீத் சிங்குக்கு, பிறந்தநாளுக்கு முன்னதாகவே கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. #Dev #RakulPreetSingh
    ரகுல் பிரீத் சிங் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தான் அவரை முன்னணி கதாநாயகியாக வளர்த்தது. மீண்டும் தமிழுக்கு வந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு தேவ் படத்திலும் ஜோடியாகி இருக்கிறார்.

    சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பொருட்சேதமும் ஏற்பட்டது.

    இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வர சிரமப்பட்டனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.

    முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
    அதோடு வரும் அக்டோபர் 10-ம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 21-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. #Dev #RakulPreetSingh #Karthi

    பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்ற ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் என்பவர் நடிக்க இருக்கிறார். #RamyaKrishnan
    எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலியின் 2 பாகங்களும் இந்திய சினிமாவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் முன்கதை தற்போது இணைய தொடராக வெளியாக உள்ளது. பிரவீன் சத்தாரு, தேவ கட்டா ஆகியோர் இயக்கிவரும் இதில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி எனும் கதாபாத்திரத்தின் இளைய வயதுக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தேர்வாகியுள்ளார்.



    சமீபத்தில் வந்த லவ் சோனியா படத்தின் வாயிலாக கவனம் பெற்றவர் மிருணாள். ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக மூன்று பிரமாண்ட செட்டுகள் போட்டு படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. இந்த தொடர் 9 மொழிகளில் வெளிவர உள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், அவர் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா 2-வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Padayappa2 #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியலில் வேகம் எடுத்துக்கொண்டே சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 2.0 நவம்பர் 29-ம் தேதி வெளிவர இருக்கிறது.

    இத்துடன் நடிப்பை விட்டு விட்டு தீவிர அரசியலில் இறங்குவார் என்று நினைத்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. இந்த படம் படையப்பா படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது. 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் வெளியான படையப்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



    அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து ஜக்குபாய் மற்றும் ராணா படங்களை இயக்குவதாக இருந்து அவை கைவிடப்பட்டன. பின்னர் இருவரது கூட்டணியில் லிங்கா வெளியாகி தோல்வி அடைந்தது. மீண்டும் ரஜினியை இயக்க இருக்கும் படத்துக்காக ரம்யா கிருஷ்ணனை அணுகி இருக்கிறார் ரவிகுமார்.

    எனவே தான் படையப்பா 2 படத்தின் தொடர்ச்சி என்று செய்தி வருகிறது. ரவிகுமார் ரஜினியிடம் ஒரு கதை கூறி சம்மதம் வாங்கி இருப்பது மட்டுமே உண்மை. மற்ற எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். #Padayappa2 #Rajinikanth

    பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

    அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.



    நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

    கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த சில தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi17 #RakulPreetSingh
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.



    கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு `தேவ்' என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Karthi17 #RakulPreetSingh

    ×