என் மலர்
சினிமா

ரம்யா கிருஷ்ணனின் வேடத்தில் மிருணாள் தாகூர்
பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்ற ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் என்பவர் நடிக்க இருக்கிறார். #RamyaKrishnan
எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலியின் 2 பாகங்களும் இந்திய சினிமாவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் முன்கதை தற்போது இணைய தொடராக வெளியாக உள்ளது. பிரவீன் சத்தாரு, தேவ கட்டா ஆகியோர் இயக்கிவரும் இதில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி எனும் கதாபாத்திரத்தின் இளைய வயதுக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தேர்வாகியுள்ளார்.

சமீபத்தில் வந்த லவ் சோனியா படத்தின் வாயிலாக கவனம் பெற்றவர் மிருணாள். ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக மூன்று பிரமாண்ட செட்டுகள் போட்டு படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. இந்த தொடர் 9 மொழிகளில் வெளிவர உள்ளது.
Next Story






