search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவ்"

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். #Suriya #Dev
    சூர்யா - ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

    தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார்.



    40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தேவுக்கு தண்டர் கேக் பிரிவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியை காண சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி தேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    சூர்யா தற்போது என்ஜிகே படத்தை முடித்துவிட்டு, காப்பான், சூரரைப் போற்று படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகாவும் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி உள்ளது. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். #Suriya #Dev

    விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, தேவ், சார்லி, பூஜா தேவாரியா, பெய்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் விமர்சனம். #VellaiPookal #VellaiPookalReview
    விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

    அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார். 



    இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.

    கடைசியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. 

    விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.



    தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் வித்தியாசமான அமெரிக்காவை பார்க்க முடிகிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.

    மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்' பூக்கட்டும். #VellaiPookal #VellaiPookalReview #Vivekh

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
    கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.

    இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.



    சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

    ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.



    விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.

    என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். 



    ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh
    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் `தேவ்'.

    கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, விக்னேஷ்காந்த், அமுதா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு - ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன், ஸ்டண்ட் - அன்பறிவ், கலை இயக்குனர் - ராஜீவன், பாடல்கள் - தாமரை, விவேக், ரஜத், நடனம் - தினேஷ், ஷோபி, உடை வடிவமைப்பு - நீராஜா கோனா, நிர்வாக தயாரிப்பு - கே.வி.துரை, தயாரிப்பு - எஸ்.லக்‌ஷ்மன் குமார், எழுத்து, இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசும்போது,

    இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். 

    தேவ் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    தேவ் டிரைலர்:

    இழந்ததை பற்றி கவலை இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். #RakulPreetSingh #Dev
    தமிழ், தெலுங்கு என 2 மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ’தேவ்’ பட விழாவில் அளித்த பேட்டி:-

    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பது எப்படி?

    என்.ஜி.கே, தேவ் என 2 படங்களையும் நான் ஒப்புக்கொண்டபோதே இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடிக்கவும் ஒப்பந்தமானேன். இந்தி படத்துக்கு என்னுடைய கால்ஷீட் மட்டும் 100 நாட்கள் தேவைப்பட்டன. அத்துடன் எனது எடையையும் குறைக்க வேண்டியதாகி விட்டது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌‌ஷன் படம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த மொழி என்பது முக்கியம் அல்ல. தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருக்க வேண்டும். அதுதான் என் குறிக்கோள்.

    சூர்யா, கார்த்தி ஒப்பிட முடியுமா?

    இருவருமே பெரிய திறமை சாலிகள். இருவருடனும் பணி புரிவது ஜாலியாக இருந்தது. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    2 கதாநாயகிகள் கதைகளிலும் நடிப்பது ஏன்?

    ஒரு படத்தில் எனது பங்களிப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். மற்ற நடிகர்களை பற்றி பார்ப்பதில்லை. செல்வராகவனின் பெரிய ரசிகை நான். அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரும்போது அதில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை பற்றி பேச வைக்க அவரால் முடியும்.



    சினிமாவை தவிர வேறு என்ன பிடிக்கும்?

    உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் அதற்கு ஒதுக்கிவிடுவேன். அடுத்து கோல்ப் விளையாட்டு. மாதத்துக்கு ஒருமுறையாவது விளையாடுவேன்.

    இந்த படத்தை இழந்துவிட்டோமே என்றோ இதில் ஏன் ஒப்புக்கொண்டோம் என்றோ வருத்தப்பட்டது உண்டா?

    இழந்ததை பற்றி கவலைப்பட்டது இல்லை. ஆனால் சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம் என்று வருத்தப்பட்டுள்ளேன்.
    கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. #Dev #Karthi #Suriya #NGK
    `கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.



    இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ டீசர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். #Dev #Karthi #RakulPreetSingh
    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `தேவ்'.

    ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும் போது,

    இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.



    ரகுல் ப்ரீத் சிங் பேசும் போது,

    இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

    கார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். #Dev #DevPressMeet #Karthi #RakulPreetSingh #RajathRaviSankar

    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev #Karthi #RakulPreetSingh
    `கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Dev #Karthi #RakulPreetSingh #DevonFeb14 
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Karthi
    ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது ‘தேவ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

    அடுத்ததாக ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    பாக்யராஜ் கண்ணன் இதற்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு கார்த்தியை வைத்து இயக்க இருக்கிறார். 
    சமூக வலைதளங்களில் வைரலான ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தால் கடுப்பாகி கடுமையான சொற்களை பயன்படுத்தியது குறித்து ரகுல் விளக்கம் அளித்துள்ளார். #RakulPreetSingh #Dev
    தமிழ், தெலுங்கு என 2 மொழியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ’தேவ்’ பட புரமோ‌ஷனுக்காக அளித்த பேட்டி:

    கார்த்தியுடன் 2 வது முறையாக இணைந்தது பற்றி?

    தீரன் படத்தில் இருந்து தேவ் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது முழுக்க முழுக்க காதல் கதை. மேக்னா என்னும் துடிப்பான பெண்ணாக நடித்துள்ளேன். என் பெயரை கூட நானே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சுதந்திரமானவள். நிஜத்தில் நான் அப்படியே நேர் எதிரானவள். கார்த்தி பயணங்களை விரும்புபவராகவும் நான் வேலையை விரும்புபவளாகவும் என 2 எதிர் துருவங்களாக வருகிறோம். இருவரும் இணைவதுதான் கதை.

    சமூகவலைதளங்களில் திடீர் என்று கோபப்பட்டது ஏன்?

    நான் குறைவான ஆடையில் வரும் படத்தால் ஏற்பட்ட சர்ச்சையை கேட்கிறீர்களா? அந்த படமே எனது அனுமதி இல்லாமல் எடுத்து பகிரப்பட்டது. அந்த படத்துக்கு நான் எப்படி பொறுப்பாவேன். படத்துக்கு வந்த கமெண்டுகள் என்னை காயப்படுத்தின. எனவே கோபப்பட்டேன். சிலரின் வாயை அடைக்க நான் கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. கமெண்டு செய்த நபருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்த்தவே அப்படி செய்தேன். அந்த நபர் இனி அப்படி கமெண்ட் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இது போன்ற தொந்தரவுகளுக்கு துணிச்சலாக பதிலடி கொடுக்கவேண்டும்.



    இந்தியில் நடிக்கும் அனுபவம்?

    தமிழ், இந்தி என்று பிரிக்காதீர்கள். திறமையை மட்டும் பாருங்கள். ஸ்ரீதேவி, டாப்சி, தபு, மதுபாலா என்று இங்கு இருந்து இந்திக்கு சென்று சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

    ஸ்ரீதேவி பயோபிக்கில் நடிப்பதாக செய்தி வந்ததே?

    எனக்கு பயோபிக் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். யாராக நடிக்கிறேன் என்பது எனக்கு பிரச்சினை இல்லை. சாவித்திரி வாழ்க்கை படம் போன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும். ஸ்ரீதேவி படம் பற்றி இன்னும் யாரும் என்னை அணுகவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சம் நடிப்பேன்.

    சூர்யா, கார்த்தி ஒப்பிட முடியுமா?

    இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவருடனும் பணிபுரிவது ஜாலியாக இருந்தது. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    இயக்கம், தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?

    படம் தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. இயக்கத்தில் ஈடுபடும் அளவுக்கு என்னிடம் கற்பனைத்திறனும் கிடையாது. கேமராவுக்கு முன்பு நிற்கவே விரும்புகிறேன். #RakulPreetSingh #Dev

    சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யாவின் மகன் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. #Suriya #Dev
    சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே பொது நிகழ்ச்சிகளில் சூர்யா ஜோதிகா உடன் கலந்து கொள்வார்கள். ஆனால், படத்தில் நடித்ததில்லை.

    சமீபத்தில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இந்த செய்தி வெளியான சமயத்தில் 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும், “தங்களுடைய படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை” என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பதிவை வைத்து, இதில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கவுள்ளார் என்று செய்திகளை வெளியிட்டனர்.


    சூர்யாவின் ரசிகர்களும் இதைக் கொண்டாட தொடங்கியதைத் தொடர்ந்து, 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Suriya #Dev

    கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev
    பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 29ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 5 பாடல்களை உருவாக்கி இருக்கிறார்.



    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.
    ×