search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்தி"

    • 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது
    • ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், தென்னித்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக வைப்புரீதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.

    இதற்கு முன்பாக, நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் 1 கோடியும், நடிகர் விஜய் 1 கொடியும் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா.
    • இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது.

    லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.

    இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
    • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    தமிழ் படங்களில் ஹீரோயின் இருக்கிறார்களோ இல்லையோ காமெடியன்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்ற பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் காலியானது. அந்த வெற்றிடத்தை நிரப்பியது யோகி பாபு. ஒரு காலக்கட்டத்தில் எந்த தமிழ் படங்கள் பார்த்தாலும் அதில் யோகி பாபு இருப்பார்.

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. 'எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சிடி' பாடல் மிகவும் வைரலாகியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

    இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டாமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகி உள்ளது.

    யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். ஷங்கர் தயால் இதற்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார்.
    • நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறுவதற்காக தென்னிந்திய பொதுச்செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    "நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் . " நன்றிநண்பா " என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்
    • நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முறுகன் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர்.

    தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நடிகர் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    • ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார்.
    • தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர்.

    சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய மாரி செல்வராஜை வாழ்த்தி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

    தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்தாக துருவ் விக்ரம் வைத்து பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார்.
    • விரைவில் இந்த படத்தின் இதர அப்டேட்கள் வெளியாகும்.

    நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


     

    'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

    இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    • அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார்
    • பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் வெளியானது. இதை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், ஜப்பான் படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். நலன் குமாரசாமி எடுத்த இந்த இரண்டு திரைப்படமுமே மிகவும் வித்தியாசமான படம் மிக பெரிய வசூலை ஈட்டியது . அதனால் அவர் கார்த்தியை வைத்து இயக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது  இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



     


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
    • டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கார்த்தியின் 25-வது படமாக வெளிவந்த ஜப்பான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் தற்போது '96' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்திலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இந்த வரிசையில் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    விக்ரம் பிரபு, எம்.எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்த டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான டாணாக்காரன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    கார்த்தி - தமிழ் இணையும் இப்புதிய படம், 1960-களின் காலகட்டத்தில் நடைபெறும் கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×