search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priest"

    • புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதாஸ். இவர் தற்போது இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கி உள்ளார். இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதுவரை மூடப்படவில்லை. மேலும் கூடுதலாக மதுக்கடைகளை திறந்துவிட்டனர்.

    புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. மேலும் கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதாக தெரிகிறது.

    அவ்வாறு அழைத்தால் பா.ஜ.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி போன்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி சார்புடையவர்களாக பொருளாகிவிடும். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதில் உறுதியாக இருந்தால் அப்படிப்பட்ட கிறிஸ்துவர்களை நம்புவதை விட பா.ஜ.க.வை நம்புவதே மேல் என முடிவு செய்து குருக்களிலேயே கொள்கை உறுதி கொண்ட நாங்கள் பொன்விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக பாதிரியார் அமலதாஸ் கூறியதாவது:

    தூத்துக்குடி மறைமாவட்ட பொன் விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை நான் எதிர்க்கிறேன்.

    கிறிஸ்தவ மதம் அனைவருக்கும் பொதுவானது. எனவே இந்த விழாவிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் புல்லெட்டி குரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இந்த கிராமத்தில் விஜயவாடாவை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தேவாலயம் நடத்தி வருகிறார். 17 வயது சிறுமி அடிக்கடி தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று வந்தார்.

    சிறுமியிடம் நைசாக பேசிய பாதிரியார் பணம் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வயிறு பெரியதாக தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பாதிரியாரிடம் கேட்டபோது சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    நிறை மாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி அமலாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என எண்ணிய பாதிரியார் பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

    இந்த விஷயம் குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்ககூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை சிறுமியின் உறவினர்களுக்கும் மற்றும் பிரச்சனை நடத்தும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொடுத்தார்.

    இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கலெக்டர் ஹிமான்ஷி சுக்லாவிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அமலாபுரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    போலீசார் தலை மறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

    • ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
    • பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக ஸ்டான்லி குமார் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    போதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

    சர்ச்சுக்குள் அதிநவீன சுழலும் வீடியோ-ஆடியோ பதிவுகளுடன் கூடிய காமிராக்களை பொருத்தி உள்ளார். அதன் மூலம் சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பல பெண்களின் புகைப்படத்தினை மார்பிங் செய்து வைத்துள்ளதாக மிரட்டி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோ க்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஸ்டான்லி குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆலயத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஸ்டான்லி குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் ஆகும்.

    குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் போதகர் பாலியல் புகாரில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    • புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், 49 வயதான பாதிரியார் ஒருவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதிரியாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
    • 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பக்தர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் பவுல் ( வயது 25).
    • மாணவிக்கும் அனிஷ் பவுலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் பவுல் ( வயது 25).

    காதல்

    பாதிரியாரான இவரது தந்தை அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இந்த சபைக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் அனிஷ் பவுலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு மறுப்பு

    இந்நிலையில் அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனிஷ் பவுலிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, அந்த மாணவியுடன் பேசு வதையும் நிறுத்தி விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு

    பின்னர் தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த அனிஷ்பவுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அனிஷ்பவுல் திருமண ஆசைக்காட்டி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அனிஷ் பவுல் மற்றும் அவரது தந்தை, உறவினர் ஒருவர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சருக்கு கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நமது பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.தமிழகம் முழுவதும் பல ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்பங்கள் கோவில் பணியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமானது.

    பண்டிகைகள், திருவிழாக்கள் என விடுமுறை இன்றி அர்ச்சகர்கள், பூசாரிகள் பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில் சினிமாத்துறை, கல்வித்துறை, அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் சிறந்த கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
    • அம்மன் கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் 2006-ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு மதுரை உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக, அர்ச்சகர் பயிற்சி பள்ளி 2008-ம் ஆண்டு மூடப்பட்டது.

    அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர்,

    மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., தக்கார் கருமுத்து கண்ணன், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கொல்லிமலையில் முன்விரோதம் காரணமாக பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, பீம நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பபோயன் (வயது 65).

    இவர், அதே ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூசாரியாகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    குப்பபோயன் கோவிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருவதால் அவரை மாற்றக்கோரி குப்புசாமியும் (50) இவரது தம்பிகள் ஏழுமலை(45), மணிகண்டன் (40) ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பு பூசாரி குப்பபோயனுக்கு சாதகமாக வந்தது. இதனால் குப்புசாமியும், அவரது தம்பிகளும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் முன்விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

    கடும் ஆத்திரத்தில் இருந்த குப்புசாமி மற்றும் அவரது தம்பிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் அரிவாளுடன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குப்பபோயன் வீட்டிற்குள் புகுந்தனர்.

    அவர்களை கண்டு குப்பபோயன், அதிர்ச்சி அடைந்தார். பல முறை கூறியபிறகும் கேட்கவில்லை. இனிமேல் உன்னை விட மாட்டோம் என்றபடி குப்பபோயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க குப்பபோயன் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறியபடி ஓடினார். ஆனால் அவரது தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

    பின்னர் குப்புசாமியும், அவரது தம்பிகளும் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள், ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகிறார்கள். #tamilnews
    சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
    சேலம்:

    ‘மீ டு’ வில் பிரபல நடிகர்கள், கவிஞர்கள் உள்பட பலர் மீது நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் புகார் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    அந்த புகாரில் சேலத்தை சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தின் பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாவும், அப்போது தான் மறுத்ததால் ஆடைகளை கிழித்து தொந்தரவு செய்ததாகவும் கூறி இருந்தார்.

    அந்த புகார் குறித்து மாநகர உதவி கமி‌ஷனர் ஒருவரை விசாரிக்குமாறு கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமி‌ஷனர் அந்த பெண்ணை அழைத்து விசரணை நடத்தினார். அப்போது கண் கலங்கிய அந்த பெண் கதறி அழுதார். மேலும் அந்த பாதிரியாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பு பிறக்க போவதாக பூசாரி கூறிய வார்த்தையால் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்தார்.

    இந்த நிலையில் மாலதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என்று தெரிந்தது. ஆனால் அதனை கோகிலா ஏற்கவில்லை.

    தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளும் வந்தது. அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.

    தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் கோமதி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். பூசாரி சரியாக நள்ளிரவு 12.20 மணிக்கு நாகப்பாம்பு பிறக்க போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.

    இதற்கிடையே போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை என தெரிவித்துள்ளனர். என்றாலும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரி சோதித்து சிகிச்சை மேற் கொள்ள டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×