search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
    X

    கிராம பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராம பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்

    • கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
    • 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×