search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பி"

    • சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
    • சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார்.
    • பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த டிரைவரை அரிவாளால் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு (55), அவரது குடும்பத்தினர், காரை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சின்னகண்ணு, இவரது மகன்கள் மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் டிரைவரை அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த வெங்கடேஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

    பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    • கிறிஸ்டோபர் ஜெயராஜ் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.
    • சாலமோன் அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (வயது58). இவர் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவருக்கும் அவரது அண்ணன் சாலமோனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் நேற்று பஸ் நிறுத்தம் அருகே கிறிஸ்டோபர் நின்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த சாலமோன் அவரை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார்.

    இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாலமோன் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி சாலமோனை தேடி வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தில் உள்ள சுடலை மாடசுவாமி கோவிலில் சமீபத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள கல்லுவிளையில் உள்ள ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது லீபுரத்தைச் சேர்ந்த பாலபிரசாத் (வயது 30) மற்றும் அவரது தம்பி விஷ்ணு பிரசாத் (20) என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்குமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார்.
    • தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    கன்னியாகுமரி : 

    திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் முகமதுகாஜா (வயது 42). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (32). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். முகமதுகாஜா சமீபத்தில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதனிடையே திருச்சியில் இருந்த செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார். அவரது உடலை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் திங்கள்சந்தை பறையன்விளைக்கு கொண்டு வந்தனர். அதே ஆம்புலன்சில் முகமதுகாஜா அவரது மனைவி செய்யது அலி பாத்திமா மற்றும் பிள்ளைகளும் வந்தனர். செய்யது அலி பாத்திமா தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று சகோதரர் இறந்த துக்கத்தில் இருந்த செய்யது அலி பாத்திமா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது அலி பாத்திமா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து முகமது காஜா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×