search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமியை கர்ப்பமாக்கி பிறந்த குழந்தையை விற்ற பாதிரியார்- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்
    X

    சிறுமியை கர்ப்பமாக்கி பிறந்த குழந்தையை விற்ற பாதிரியார்- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

    • பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் புல்லெட்டி குரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இந்த கிராமத்தில் விஜயவாடாவை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தேவாலயம் நடத்தி வருகிறார். 17 வயது சிறுமி அடிக்கடி தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று வந்தார்.

    சிறுமியிடம் நைசாக பேசிய பாதிரியார் பணம் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வயிறு பெரியதாக தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பாதிரியாரிடம் கேட்டபோது சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    நிறை மாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி அமலாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என எண்ணிய பாதிரியார் பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

    இந்த விஷயம் குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்ககூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை சிறுமியின் உறவினர்களுக்கும் மற்றும் பிரச்சனை நடத்தும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொடுத்தார்.

    இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கலெக்டர் ஹிமான்ஷி சுக்லாவிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அமலாபுரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    போலீசார் தலை மறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×