search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன்"

    • சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
    • சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் கைவரிசை
    • வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரும் சிக்கினர்

    கோவை,

    கோவை கணபதி தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது30). இவர் சங்கனூர் பகுதியில் பேக்கரி மற்றும் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி பிரேம்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார்.

    பின்னர் மறுநாள் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தது பிரேம்குமாரின் சித்தப்பா மகன் மரிய அமிர்தம் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    பிரேம்குமார் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்ற மரிய அமிர்தம் தொழில் முறையிலான கொள்ளையர்கள் திருடுவது போன்று வீட்டு பீரோவில் இருந்த உடைமைகளை களைத்து போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சொந்தமாக தொழில் செய்து வரும் மரிய அமிர்தம் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். எனவே அவர் அதனை ஈடு செய்யும் வகையில் தனது சொந்த பெரியப்பா மகன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் கணபதி வ.உ.சி. நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசூப் (47) என்பவர்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து காரமடையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்துள்ளோம்.

    கோவையில் நகை கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு செல்ல வேண்டும்.

    இதனால் ரோந்து பணியில் போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பதன் மூலம் கொள்ளை சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் வீட்டை பூட்டும் போது வெளிப்பக்கமாக பூட்டு தெரியும் படி பூட்டாமல் உள்பக்கமாக பூட்ட வேண்டும். பூட்டு வெளியே தெரிந்தால் அது வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு கொள்ளையர்கள் கண்களை உறுத்தும். எனவே கொள்ளை சம்பவங்களை குறைக்க மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அவருடன் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் செல்வி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.  

    • உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கமிட்டியார்காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23) .இவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரஞ்சினியின் தாய்மாமா கிருஷ்ணசாமி மற்றும் தினேஷ்,கோபி ஆகியோர் மதன்குமாரின் அண்ணன் நரேந்திரன் வீட்டுக்கு சென்று உன் தம்பி எப்படிடா எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துள்ளனர். இதில் நரேந்திரன் காயம் அடைந்தார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த நரேந்திரன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    • தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார்.
    • பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த டிரைவரை அரிவாளால் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு (55), அவரது குடும்பத்தினர், காரை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சின்னகண்ணு, இவரது மகன்கள் மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் டிரைவரை அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த வெங்கடேஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

    பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    • கிறிஸ்டோபர் ஜெயராஜ் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.
    • சாலமோன் அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (வயது58). இவர் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவருக்கும் அவரது அண்ணன் சாலமோனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் நேற்று பஸ் நிறுத்தம் அருகே கிறிஸ்டோபர் நின்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த சாலமோன் அவரை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார்.

    இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாலமோன் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி சாலமோனை தேடி வருகிறார்கள்.

    • தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.
    • வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் தருமபுரி, திருப்பத்தூர் பிரதான சாலையோரம் உள்ள ஏரிக்கரையோரம் மத்தூர் பகுதியை சேர்ந்த ரம்ஜான் மற்றும் அவரது மருமகன் இம்ரான் ஆகிய இருவரும் தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமால்பாஷா என்பவரது மகன்கள் சாதிக்பாஷா, அவரது தம்பி முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இதில் இருவருக்கு மிடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த முஸ்தபா ஆத்திரமடைந்து தனது சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தமிட்டுள்ளனர்.

    அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் கத்தி குத்தில் அடிபட்டு கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முஸ்தபா, சாதிக் பாஷா இருவரையும் கைது செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • நாயை ஏவி கிருஷ்ணமூர்த்தியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
    • காரிமங்கலம் போலீசார் இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேல் கொள்ளுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 65) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான குப்பன், சண்முகம் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    கடந்த ஆண்டில் கிருஷ்ணமூர்த்திக்கும் குப்பன், சண்முகம் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த குப்பன், சண்முகம் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நாயை ஏவி கிருஷ்ணமூர்த்தியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதனால் அவர் பாலக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று கிருஷ்ணமூர்த்தியை நாயை வைத்து கடிக்க வைத்த அண்ணன் தம்பியான குப்பன், சண்முகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காரிமங்கலம் போலீசார் இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தில் உள்ள சுடலை மாடசுவாமி கோவிலில் சமீபத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள கல்லுவிளையில் உள்ள ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது லீபுரத்தைச் சேர்ந்த பாலபிரசாத் (வயது 30) மற்றும் அவரது தம்பி விஷ்ணு பிரசாத் (20) என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்குமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×