search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutharasan"

    • ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.
    • பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்ட பொறுப்பானது மதிக்கத் தக்க கண்ணியமான ஒரு பொறுப்பு. ஆனால் தொடர்ந்து அந்த பொறுப்புக்கு அவர் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை என்பது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு முதல் நாள் இரவு 12 மணிக்கு தான் அச்சடிக்கப்படும்.

    அதனை அப்படியே வாசிக்க வேண்டும் என்பது மரபு. அதில் ஒரு பகுதியை நீக்குவதும், இன்னொரு பகுதியை சேர்ப்பதற்கும் அவருக்கு உரிமை கிடையாது. மேலும் அந்த கொள்கை, திட்டத்தின் மீது கருத்துக்களை சொல்லும் உரிமை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்குதான் இருக்கிறது. உரை பொய்யானது என்று கவர்னர் கூறுவது அபத்தமானது, கண்டனத்திற்குரியது. கவர்னர் இவ்வாறு பேசுவது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் அவரை இந்த நேரம் டிஸ்மிஸ் செய்து, கைது செய்திருக்க வேண்டும். ஆனால் யோக்கியமற்ற அரசாக இருக்கின்ற காரணத்தால் அவரது இஷ்டத்துக்கு கருத்து சொல்கிறார். சனாதனத்தை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார். சனாதனம் தான் நாட்டின் சீரழிவுக்கு காரணம்.

    நாங்கள் ரவியை கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக, பா.ஜ.க. தொண்டனாக இருந்து என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு பேசலாம். ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. ராஜ்பவன் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உங்களுக்கு சம்பளத்தை மக்களின் வரிப்பணத்தில் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

    பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மைக்கு புறம்பான மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துக்கள் உள்ள படமாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. உளவுத்துறையும் கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களிடையே மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.
    • கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கே எனது வேலை? என்ற தொடர் பரப்புரை பயண எழுச்சி மாநாடு திருச்சியில் வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. தனியார் மயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அவுட் சோர்சிங் செய்யும் முறையை தேர்ந்தெடுத்து குறைவான ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

    மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்தையும் இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை தொடர் பரப்புரை பயணம் எழுச்சி மாநாடு திருச்சி புத்தூரில் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    முன்பு இருந்த பிரதமர்கள் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்.

    தனியாரை ஊக்குவிக்கும் வகையிலேயே 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதானிக்கு தனியார் முதலீடு அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கட்சிகள் கோரிக்கை.

    அதானிக்கு ஏஜெண்டாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்பது தான் அவமானமாக, வெட்கக்கேடாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

    கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அதேபோன்று கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு எந்தஒரு பதிலும் அளிக்கவில்லை.

    ராகுல் காந்தி எம்.பி. மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதான வழக்கில் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, அவரது வீட்டை காலி செய்வது என்பது ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சிகளே இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் முன்னோட்டம் தான் இது. இந்திய ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சம்மட்டி அடிதான் இது. தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

    தி.மு.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த முடியாது, நடத்தவும் மாட்டோம். ஏனென்றால் கடந்த எடப்பாடி ஆட்சியை விட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியதாக புகார்
    • சக்தி சேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்

    கோவை, செப்.9-

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

    அவரது இந்த பேச்சு இந்து மதத்தினரை அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது.
    • வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் டில்லி பாபு, கமல் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    கங்கை ஆற்றில் குளிக்க செல்வதற்காக பாதுகாப்பு அரணாக இருப்பதற்காக சந்தன கொலுவை கொண்டு பிள்ளையாரை உருவாக்கி நான் குளித்துவிட்டு வரும் வரை யாரையும் இங்கு அனுமதிக்க கூடாது என்று பார்வதி தாயார் உத்தரவிட்டு சென்றார்.

    எம்பெருமான் சிவன் வருகை புரிந்த போது பிள்ளையார் சிவனை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்தார். நான் உருவாக்கிய எனது பிள்ளையை சிவன் கொன்று விட்டாரே என்று ஆக்ரோஷம் கொண்டு காளி தேவியாக உருவெடுத்து வேகமாக புறப்பட்டார் தாய் பராசக்தி. பராசக்தியின் கோபத்தை அடக்குவதற்கு உடனடியாக சிவன் ஒரு தலையை கொண்டு வாருங்கள் என்று ரிஷிகளுக்கு உத்தரவிடுகிறார். காடுகளில் தேடிச் செல்லும்போது முதலில் தென்பட்டது யானையின் தலை. அதை கொண்டு வந்து பொருத்தி விட்டனர்.

    ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. அன்று முதல் பிள்ளையார் சதுர்த்தி விழா அந்த திதியிலேயே இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்து மதத்தின் வரலாறு தெரியாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது. வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    அத்துடன் பார்வதி அம்மா கங்கையில் குளிக்க சென்றுள்ளார். அவர் ஆண்டு முழுவதும் பல மாதகாலமாக குளிக்கவில்லை என்றால் உடலில் அழுக்கு தானே வரும். அந்த அழுக்கை முழுவதும் ஒன்று திரட்டி ஒரு பொம்மை செய்தார்.

    அந்த பொம்மை விநாயகராக மாறிவிட்டது. அந்த அழுக்கை நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு நாங்கள் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூறி இந்துக்கள் மனதை விநாயகர் பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

    தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.

    கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி பிச்சன்கோட்டகம், தென்பாதி, மேலமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது பெய்த கனமழையினால் சம்பா தாளடி பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மீன்பிடி தடை காலங்களில் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகை போல், விவசாய தொழிலாளர்கள் மழை காலங்களில் வேலைக்கு செல்லாத நிலை உள்ளது. அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் முழுவதும் பழுதடைந்துள்ளன. பழுதடைந்த வீட்டிற்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். வளவனாறு கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு தலையிட்டு அந்த வளவனாற்று கரையை பலப்படுத்தி சாலை அமைத்து தர வேண்டும்.

    இ்வ்வாறு அவ் கூறினார்.

    பேட்டியின் போது விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி, மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
    காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். பா.ஜனதா மதமோதல்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மதசார்பற்ற கொள்கைக்கு எதிரானது.

    காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும். கடந்த டிசம்பரில் இருந்து மே மாதம் வரை மாத வாரியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை 13 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை வழங்க வேண்டிய தண்ணீரை 13 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை வழங்க காவிரி ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால் கொடுக்காமல் விட்டுப்போன தண்ணீரை பற்றி வாரியம் எதுவும் கூறவில்லை. தமிழக அரசும் அதைப்பற்றி கேட்கவில்லை.

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தமிழகத்துக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.

    தமிழகம் முழுவதும் குளம், குட்டைகளில் தண்ணீரின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி பல இடங்களில் தண்ணீர் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையில் ஒரு டேங்கர் தண்ணீர் ரூ.1500-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரிய டேங்கர்களில் வரும் தண்ணீர் தனியார் டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முத்தரசன், எஸ்றா.சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் ராமதாஸ் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி அறிக்கை வெளியிட்டு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Ramadoss #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொன்பரப்பி வன்முறையைக்கண்டித்து கடந்த 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், எஸ்றா.சற்குணம், ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் “பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    சமூக நீதிப் போராளி பேராயர் எஸ்றா.சற்குணம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, ராமதாசுக்கு நம்பிக்கையில்லாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.

    தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக் கொள்ள ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகள் இருக்கும் போது, அவர் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

    அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல உரிய செயலும் அல்ல!

    தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அமையாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம். இதுவே அரசியலின் இறுதிக் கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும்.

    அதை விடுத்து அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ் சமூகத்திற்குப் பேராபத்தானது.

    தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை நன்கறிவார்.

    ஆகவே ராமதாஸ் அவர்கள் மீண்டும் இது போன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிட இடம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல, மனப்பூர்வமான வேண்டுகோள். முத்தரசன் மற்றும் பேராயருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #DMK #MKStalin
    தேனி பாராளுமன்ற தொகுதியில் பண மழை வீசுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan #parliamentelection

    போடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போடி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை மறந்து மாற்றாக ரவுடி தனத்தை கட்டவிழ்த்து பண மழையை நம்பி அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தேர்தலை சந்திக்கின்றன. அரசு அதிகாரத்தையும் ஆணவத்தையும் கொண்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம் என அந்த கட்சிகள் கனவு காண்கின்றது.

    கடந்த 2004-ம் ஆண்டு வீசிய அலை 2019-ம் ஆண்டிலும் வீசுகிறது. எனவே தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும். தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வி.ஐ.பி. தொகுதியாக தேனி மாறியுள்ளது.

    மழை வளம் குறைந்து விவசாயம் பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆனால் பண மழை தேனி தொகுதியில் சூறாவளியாய் வீசுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mutharasan #parliamentelection

    பா.ஜனதா எதிர்ப்பு அலையால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Mutharasan

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆளும்மோடி அரசின் மீதான இந்த எதிர்ப்பு எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.

    பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணி நிர்பந்தத்தினால் உருவான கூட்டணி. ஆனால் மதசார்பற்ற கூட்டணி கொள்கைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி.

    மோடி மட்டுமே தேசத்தை பாதுகாக்கும் தலைவர் போல் முன்னிலைப்படுத்துகிறார்கள். நேரு மிகப் பெரிய தலைவர். அவரது மறைவுக்கு பிறகு நாட்டை பாதுகாக்கப் போகும் தலைவர் யார்? என்ற பயம் நாடு முழுவதும் எழுந்தது. லால்பகதூர், சாஸ்திரி அடுத்த பிரதமராக வந்தார்.



    அந்த கால கட்டத்தில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்தோம். நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக் காக்கும் பல தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. கிறிஸ்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பது எங்கள் கூட்டணி தான் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதாவுக்கு சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. அதனால் தான் மதத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்கள்.

    ஆனால், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் இந்துக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன. அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    உச்சநீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    ×