search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்
    X

    4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன. அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    உச்சநீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    Next Story
    ×