search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipality"

    • நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன.

    சங்கரன்கோவில்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 3.6.2022 முதல் ஒவ்வொரு மாதமும் சங்கரன்கோவில் நகராட்சியில் 2 மற்றும் 4-வது வாரங்களில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. இது தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

    நகராட்சி பகுதிகள்

    இத்திட்டத்தின்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வ லர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்ககமாக பங்கேற்க செய்து நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அப்பகுதியில் குப்பைகள் போடாத வண்ணம் அப்பகுதியினை மரம், அழகு செடிகள் நட்டு பராமரித்தல், பொது இடங்களில் உள்ள சுவர்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டாத வண்ணம் அப்புறப்படுத்தி சுவர்களில் மக்களை கவரும் வண்ணம் விழிப்புணர்வு ஓவியம் வரைதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடு ளை அப்புறப்படுத்தி அதே பகுதியில் மீண்டும் கொட்டா வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சுவரொட்டிகள் அகற்றம்

    நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள். பொதுமக்கள், வணிகர்கள், தொண்டு நிறுவனம் ஆகியோரை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டனர்.

    மேலும் ஒவ்வொரு வார்டிலும் தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இதனால் தற்போது நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது நகரப்பகுதிகள் அழகுற ஜொலிக்கின்றன. பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக தற்போது நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் சுத்தமாக காணப்படுகிறது.

    இப்பணியில் தினந்தோறும் ஈடுபடும் நகராட்சி மற்றும் தனியார் தூய்மை சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினர். இப்பணியில் நகராட்சியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் தொடர்ந்து பொதுமக்கள் இயக்கமாக இத்திட்டத்தினை மாற்றி நகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    பணிகளை நகராட்சி கமிஷனர் சபாநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.
    • அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமை யில் நடந்தது.துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தீர்மானங்கண அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடந்த விவாதம் வருமாறு:-

    அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    ராமகிருஷ்ணன் (த.வா.க.): வேகா கொல்லை ஊராட்சி குள்ளஞ்சாவடி சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களோடு இணைந்து அந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவேன். காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை செல்லும் சாலை, சிவன் கோவில் செல்லும் தார் சாலை அமைத்து தரவேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    விஜயதேவி தேவராசு (த.வா.க): அங்குசெட்டி பாளையம் - சிறுவத்தூர் செல்லும் பகுதியில் மாணவர்களின் நலன் கருதி மின்விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேர்மன் சபா.பாலமுரு கன்: ஒன்றிய கவுன்சிலர்களின் அனைத்து குறைகளும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்திலேயே நம்பர் 1 ஊராட்சி ஒன்றியமாக மாற அனைத்து துறை அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார். 

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலெக்டர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்  இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் கறையேறவிட்டகுப்பத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் திட்டம், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பகுதியில் குளங்கள் அமைத்தல், கடற்கரை சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிக்கான கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாக துறை) ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக துறை வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அய்யப்பன் எம்.எல். ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாநகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, சக்திவேல், சசிகலா ஜெயசீலன், சாய்துனிஷா சலீம், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், ஆராமுது, கவிதா ரகு, பாலசுந்தர், செந்தில் குமாரி, மாநகர அவை தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.

    காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
    • மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கூறியதாவது: -

    பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் குறை தீா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், நிறைகள், பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை இப்பெட்டியில் செலுத்தலாம். இந்த புகாா் மனு பெட்டி ஒவ்வொரு வாரமும் திறக்கப்பட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    ×