search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்"

    • , "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார்.
    • ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.

    எம்ஜிஆர் கழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (ஆர்.எம்.வீ)1926 செப்டம்பர் - 9 ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிவல்லத்திரா கோட்டையில் பிறந்தார்.

    இவர் பிரபல அரசியல்வாதி,மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். திரைக்கதை எழுத்தாளர் ஆவார் . ஆர்.எம்.வீரப்பன் 1956 மார்ச் 12 -ல் ராஜம்மாள் என்ற பெண்ணை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தார். அறிஞர் அண்ணா தலைமையில் தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்




    1977 முதல் 1996 வரை 5 முறை கேபினட் அமைச்சராக பணியாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், அ.தி.மு.க.வின் சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தார். 70 மற்றும் 80 -களில் அதிமுக அரசியலின் சாணக்கியர் என்றும் அழைக்கப்பட்டார்.

    1964 -ல் ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் என்ற பெயரில் "தெய்வ தாய்" திரைப்படம் தயாரித்தார். இப்படத்தில் எம்ஜிஆர்- சரோஜா தேவி ஜோடியாக நடித்தனர். அதைத் தொடர்ந்து நான் ஆணையிட்டால் , காவல்காரன் , கண்ணன் என் காதலன் , இதயக்கனி,  ரிக்ஷாக்காரன் ,காதல் பரிசு , காக்கி சட்டை , ராணுவ வீரன் , மூன்று முகம் , தங்க மகன் , ஒரு காவலன் , பணக்காரன் , மந்திரபுன்னகை , 




     


    புதியவானம் ,பாட்ஷா ,  உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதில் ரஜினி நடித்த பாட்ஷா  படம் வசூல் சாதனை படைத்தது. 1971 தேர்தலில் அறிஞர் அண்ணாவின் திமுக சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்ய ரிக்ஷாக்காரன் திரைப்படம் பயன்படுத்தப்பட்டது.

    1972-ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறினார்.அப்போது  ரசிகர் மன்றங்களை அமைத்து அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்க எம்.ஜி.ஆருக்கு உதவினார்.

    மூத்த மகள் செல்வி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனை திருமணம் செய்தார். 1984 -ல், எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டிருந்த போது, கட்சி நடவடிக்கைகளை, தேர்தல் பிரசாரத்தை, ஆர்.எம்.வி., கவனித்தார்.



    1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சி 2 அணிகளாக உடைந்தது, அங்கு அவர் தலைமையில் பெரிய அணி இருந்தது. வி.என்.ஜானகியை முதலமைச்சராக்க 98 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றார். அதன் பின் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து, கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.

    'பாட்ஷா' பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.




    அதை தொடர்ந்து சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். தற்போது வரை அந்த கட்சியை அவர் நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களாக ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் காணப்பட்டார். அதை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று தனது 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.

    • கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அசாமின்  ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி. உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

    தற்போது இவர் கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அந்த அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.




    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதாக உறுதியளித்து வரும் நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பது இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இலுப்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது.
    • ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவாக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் சீதா வைரவன், அமுதா லெட்சுமணன், இலுப்பக்குடி ஊராட்சி செயலர் வீரப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ் நன்றி கூறினார்.

    • முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம்பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் (45). இவர் சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். தற்போது அவரது மனைவி சுமதி தவசியப்பன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது பழைய வீட்டில் வெயில் காலம் என்பதால் அங்கு காற்று நன்றாக வரும் என்று அங்கே படுத்து தூங்கினர். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில்வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று உள்ளே சென்று முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதும் அதில் இருந்து இறங்கிய ஒருவர் பெண் பஞ்சாயத்து தலைவர் சுமதி தவசியப்பன் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மோப்ப நாய் நின்றது. தொடர்ந்து போலீசார் நகை-பணம் திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
    • தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது நான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றார்.

    பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். ஆனால் காருக்குள் இருந்த சிராஜுல் ஹக் உள்பட சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நாட்டின் தொடர்ச்சியான பண வீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் காரணம் என்றார்.

    இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கண்டனம் தெரித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு பலுசிஸ்தான் அரசை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உடுமலை வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவா் டி.சௌந்திரராஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இதுதொடா்பாக அவா் அளித்த விளக்கம் ஏற்கத் தகுதியில்லாததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது. இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சௌந்திரராஜனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    • மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் கோரிக்கை
    • பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

    கன்னியாகுமரி :

    மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சென்னை செல்வதற்கு பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார். தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களி லேயே 14 மணி நேரம் ஆகிறது. இதனால் அவர்களுடைய அதிகமான நேரத்தை பயணத்திற்கு செலவிட வேண்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத் தில் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்வதும் இயலாத காரி யமாக இருந்து வருகிறது.

    நாட்டில் பல இடங்களில் தற்போது மத்திய அரசு வந்தே பாரத் ரெயில்களை இயக்கி பொதுமக்களின் பயண நேரத்தை மிகவும் குறைத்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் நெல்லையில் இருந்து இன்னும் கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிவடையாத சூழ்நிலையில் உள்ளது. எனவே தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னையி லிருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே மனுவை அவர், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பி உள்ளார்.

    • மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது. நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், ஆசிரியர் முருகன், காங்கிரஸ் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமீல் அகமது நன்றி கூறினார்.

    • சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்று பேசினார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, வடக்கு பள்ளி தலைவர் சாகுல்அமீது,தெற்கு பள்ளி தலைவர் அப்துல் சலாம், யூனியன் தலைவர்-மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, மாநில விவசாய அணி செயலாளர் நல்ல சேதுபதி, ஒன்றிய பொறுப்பாளர் காந்தி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய சேர்மன் சேகர்,ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்-கவுன்சிலர் புரோஸ் கான், 3-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ராம்கோ மேலாளர் மரியக்கண்ணு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நாசிர் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், மாவட்டத் துணைத் தலைவர் அகமது இப்ராகிம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உபயத்துல்லா, நிசார், சாகுல் ஹமீது மலேசிய மண்டல செயலர் இர்ஷாத் , ஒன்றிய தலைவர் உமர் அலி, ம.ம.க. ஒன்றிய செயலாளர் முகமது இக்சானுல்லா, த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசுல் இஸ்லாம், திருவாடனை ஒன்றிய ம.ம.க. செயலர் காமராஜ், தொண்டி பேரூர் காதர், ம.ம.க. செயலர் பரக்கத், பொருளாளர் மைதீன் முன்னிலை வகித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. கிளை தலைவர் ஜம்ரி, ம.ம.க. செயலாளர் இப்ராகிம், த.மு.மு.க. செயலாளர் மஹாதீர் ரகுமான், ம.ம.க. செயலாளர் சுலைமான், துணைச் செயலாளர் மஹாதீர், சபீக் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
    • விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது.
    • புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

    திருப்பூர் :

    இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர், உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா; துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். புதிய நிர்வாகி களுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

    திருப்பூரில் சி.ஐ.ஐ., கிளை துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக தற்போது, ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×