search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி வசூல்"

    • 2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
    • 2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023-மார்ச் 2024) மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 20.14 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் வசூலித்ததை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

    2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகள் வெளியிட்டுள்ள அறிக்கயைில், "மார்ச் 2024க்கான மொத்த நல்ல மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், 11.5 சதவீத வளர்ச்சியுடன், 1.78 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைக் கண்டுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் இந்த எழுச்சி ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் 2024க்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர ரீஃபண்ட் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

    இதில், மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து வரி வசூலாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
    • ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சுரேந்தர் ஷா பொறுப்பேற்றார். அதுமுதல் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கிகளை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சுரேந்தர் ஷா விழுப்புரம் நகராட்சியில் இருந்து விடைபெற்று, திருவள்ளுவர் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
    • வாழப்பாடி பகுதியில் கோவில் விழாவிற்கு காளையுடன் சென்று வீடு வீடாக வரி வசூல் செய்த நிகழ்வு நடைபெற்றது.

    வாழப்பாடி:

    கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் மாரியம்மன், காளியம்மன், சென்றாயப்பெருமாள், செல்லியம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டத்திற்கு, கோயில் காளைகள் மற்றும் குதிரைகளை அலங்கரித்து தாரை, தப்பட்டை உறுமி மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும் பாரம்பரிய பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தேர்த்திருவிழா நடத்தும் செலவிற்கு பணம் வசூல் செய்வதற்கும் கோவில் காளையை அலங்கரித்து வீடுகள் தோறும் அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வரி தண்டல் செய்து வருகின்றனர்.

    கோவில் காளையுடன் அண்டை கிராமமான வாழப்பாடிக்கு சென்ற மன்னாயக்கன்பட்டி கோயில் நிர்வாகிகள், வாழப்பாடி ஊர் பெரியதனக்காரர்க ளுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், காளையைத் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமும் வரி வசூல் செய்தனர்.

    தேர்த்திருவிழா செலவுக்கு பணம் கொடுப்பது மட்டுமின்றி, காளைக்கு தீவனம் கொடுத்தும், வரி வசூல் செய்பவர்களுக்கு குளிர்பானங்கள், தேநீர், இனிப்பு, பலகாரங்கள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பும் உபசரிப்பும் அளித்தனர். 

    • ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர்.
    • வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை, இணைய வழியில் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களிடம் இருந்து நேரடியாக வரி இனங்களை வசூல் செய்யும் பணி ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் கிராம மக்கள், vptax.tnrd.tn.gov.in என்னும் இணையதளம் வாயிலாக வரி செலுத்தலாம்.

    இதற்காக வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. இதனால், வரி வசூல் பதிவை முறைபடுத்த முடியாமல் உடுமலை சுற்றுப்பகுதி கிராமச் செயலர்கள் தவித்து வருகின்றனர்.அவ்வாறு ஆன்லைன் வாயிலாக வரி வசூல் செய்யப்பட்டாலும் பதிவேடுகளை பராமரிக்கும் கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வரி இனங்கள் செலுத்தப்பட்டாலும் அந்த விபரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டியுள்ளது.இதனால் முதற்கட்டமாக வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை முறையாக பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பதிவேடுகளுடன் கம்ப்யூட்டரிலும், விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.

    அதேபோல இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. அதனால் ஆன்லைன் பதிவில் பிழை ஏற்பட்டால் அதனை சரிபடுத்த முடியாது. தற்போதைய சூழலில் வரி இனங்கள் செலுத்தியதிற்கு ரசீது வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் ஊராட்சிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த காலதாமதம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டு விட்டது.
    • நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரி இனங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளன. நகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் சென்ற ஆண்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ந் தேதிக்குள் நிலுவை வரியையும் சேர்த்து 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டுக்குரிய தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்க பரிசை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிகண்ணன், ஆணையாளர் ராஜ மாணிக்கம் ஆகியோர் பெற்றனர்.

    இந்த ஆண்டு சொத்து வரி ரூ.4 கோடி, குடிநீர் வரி ரூ.1.76 கோடி, வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட வரியற்ற வருவாய் ரூ.1.58 கோடி என அனைத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. 2-வது ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 100 சதவீத வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ராஜ மாணிக்கம் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் வரி நிலுவை தொகை இருந்ததால் வரி வசூலில் சிரமம் ஏற்பட்டது. இந்த ஆண்டு நிலுவை வரி இல்லாததால் நடப்பு நிதியாண்டின் வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டு விட்டது.

    இதன் மூலம் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற முடியும். மேலும் நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    100 சதவீத வரி வசூல் செய்த நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள்.
    • வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அபிராமம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி உள்பட ஊராட்சி சம்பந்தமான அனைத்து வரிகளையும் இன்றுக்குள் (31-ந் தேதி) முழுமையாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 436 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊராட்சிகள் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி, நூலக வரி, சொத்து வரி போன்றவற்றின் மூலம் நிதி தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.

    அதேபோல் கமுதி யூனியனில் உள்ள அச்சங்குளம், நத்தம். வங்காருபுரம், உடைய நாதபுரம், நகரத்தார் குறிச்சி, டி.புனவாசல், பாப்பணம் உள்பட 53 ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, நூலக வரி போன்றவரிகள் வசூல் செய்யப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் (இன்றுக்குள்) முழுமையாக வரி வசூல் செய்யும் பணி நடந்துவருகிறது.

    இதற்காக ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தினமும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வரி வசூல் செய்து உடனடியாக ரசீது வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளில் வருவாய் இழப்பை சரி செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் முழுமை யாக வரி வசூல் செய்யும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை செய்வதற்கு மாநில நிதிக்குழு மூலம் கூடுதல் நிதி ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆரணி பேரூராட்சியில் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே வசூல் ஆகி உள்ளது.
    • நாகலட்சுமி என்பவர் பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு,வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே ஆரணி பேரூராட்சியில் வசூல் ஆகி உள்ளது. மீதம் உள்ள 20 சதவிகித சொத்து வரியை வசூலிக்க பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று கேட்டு வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகலட்சுமி(வயது37) என்பவர் வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கேட்டார்களாம். அந்தப் பணியாளர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்து விட்டீர்கள்! என்று தகாத வார்த்தைகளால் திட்டினாராம். மேலும், பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம். இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் நாகலட்சுமி மீது பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பிரச்சனை இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
    • தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
    • ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.

    5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.

    அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.182 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதில் ரூ.210 கோடி வரை வரி வசூல் செய்யபட்டுள்ளது.

    இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், வருவாய் பிரிவினர் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரியினங்கள், குத்தகை, வாடகை, உரிமக் கட்டணம் உள்ளிட்ட வருவாய் இனங்கள் வசூல் பணி, நிலுவையில் உள்ள வரியினங்கள் விவரம், புதிய சொத்து வரி விதிப்பு பதிவேற்றம் செய்யும் பணி ஆகியன குறித்து விரிவாக ஆய்வு நடத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரியினங்களை வசூலிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். நிலுவையில் உள்ள வரியினங்களை இம்மாத இறுதிக்குள் 70 சதவீதம் வரையும், மார்ச் 31ந் தேதிக்குள் 100 சதவீதமும் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டண நிலுவை உள்ள கட்டடங்களில் இணைப்பு துண்டிக்க வேண்டும். தொழில்வரி வகையில் உரிய மாற்றம் செய்து வசூலிக்க வேண்டும். தொழில் வரி வசூல் குறித்து உரிய அலுவலகங்களுக்கு தகவல் அளித்து முழுமையாக வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.

    தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநகராட்சி பகுதியில் தொழில் வரி விதிப்பு குறைவாக உள்ளது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது 

    • கண்டனூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது.
    • கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    காரைக்குடி

    பேரூராட்சிகளின் இயக்குநரின் ஆணையின் படியும், சிவகங்கை கலெக்டரின் உத்தரவின் படியும், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், சிவகங்கை மண்டலத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில், கண்டனூர் பேரூராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்துவரி, நூலக வரி, திடக்கழிவு சேவைக் கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    கண்டனூர் பேரூ ராட்சியில் 2022-23-ம் ஆண்டில் சொத்துவரி சீராய்வு பணிகள் முடிக்கப்பட்டும், அதன் விவரங்களை என்.ஐ.சி. -ல் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டும், 27.10.2022 முதல் 11.1.2023 வரையுள்ள 77 நாட்களில், குறுகிய காலத்திற்குள் 100 சதவீதம் வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரூராட்சியில் 2022-23- ம் ஆண்டு வரி மற்றும் வரியில்லா இனங்களை வரித்தண்டலர் நாவுக்கரசு, இளநிலை உதவியாளர்கள் ரவி, யோகா, குடிநீர் மோட்டார் இயக்குபவர் ராகுல்ராஜா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வசூல் செய்து முடித்துள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டில் கண்டனூரை முன்மாதிரி பேரூராட்சியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பி னர்கள் ஆகியோர் 100 சதவீத வரி வசூல் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

    வரும் காலங்களில், தமிழக அரசால் தெரிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளையும் கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    ×